ஆதித்தமிழர்களின் அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை

பங்குனி 01, 2047 / மார்ச்சு 14, 2016 தலைமை: கு.சக்கையன் தொடக்கவுரை:  சி.வெண்மணி சிறப்புரை: வைகோ இராமகிருட்டிணன் இரா.முத்தரசன் தொல்.திருமாவளவன்   ஆதித்தமிழர் கட்சி , நெல்லை

அறிமுகம் : “நமது மண்வாசம்” – தமிழ் மாத இதழ்

“நமது மண்வாசம்” தமிழ் மாத இதழ் மதுரையிலிருந்து வெளிவருகிறது. ஆசிரியர். ப.திருமலை  வரலாறு,கலந்துரையாடல், மருத்துவம், தியாகம், நூல்ஆய்வு, விருந்தினர்,கல்வி, பெண்கள், நகைச்சுவை, ஆளுமை, அரசியல், கலை, வேளாண்மை, தண்ணீர், சட்டம், நெய்தல், நாடும்நடப்பும், கவிதை ஆகியவை இதழில் இடம்பெற்றுள்ளன. தனிஇதழ் விலை. உரூ.20/- ஆண்டுக்கட்டணம்.உரூ.200/- முகவரி: நமது மண்வாசம் பட்டறிவு பதிப்பகம் 1-ஏ,வைத்தியநாதபுரம் கிழக்கு கென்னத்து குறுக்குத்தெரு மதுரை 625 016. தொலைபேசி.91 452 2302566 தொலைப்பதிவு +91 452 2602247 தமிழ்வானம் சுரேசு

மொழிப்போர் 50 மாநாடு, மதுரை

தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/       மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்!   வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில்  தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்!   பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…

திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு  கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை….