வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

எல்லா நாளும் பொன்னாளே! – புலவர்மணி இரா.இளங்குமரன்

ஞாயி றன்று பிறந்தவனே நன்மை எல்லாம் அடைவாயே திங்க ளன்று பிறந்தவனே திறமை பலவும் பெறுவாயே செவ்வாய் அன்று பிறந்தவனே செல்வச் செழிப்பில் வாழ்வாயே புதனாம் நாளில் பிறந்தவனே புகழில் சிறந்து வாழ்வாயே வியாழ னன்று பிறந்தவனே விளங்கும் அறிவில் உயர்வாயே வெள்ளி யன்று பிறந்தவனே வெற்றி யாவும் பெறுவாயே சனியாம் கிழமை பிறந்தவனே சலியா உறுதி அடைவாயே எந்த நாளில் பிறந்தாலும் எந்தக் குறையும் வருவதில்லை. எல்லாநாளும் நன்னாளே எவர்க்கும் ஏற்ற பொன்னாளே இயற்கை தந்த நாள்களிலே எவரே குறைகள் காண்பதுவே. –…

தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”   . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் ! – பாரதிபாலன் அழைப்பு

வையவன் 75 வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் !  பாரதிபாலன் அழைப்பு எழுத்தாளர் வையவன் அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் மார்கழி 9 / 24திசம்பரில் [புதன் கிழமை ] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் மன்றத்தில்(கிளப்பில்) நடைபெற உள்ளது. முதன்மைவாணர்கள் பலரும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் தொடக்கம், இதயத்துடிப்பு இதழ் வழங்கல், ஆரூத்ரா மாத ஏடு தொடக்கம்…

வணங்குதற்குரிய வாரம்!

வணங்குதற்குரிய வாரம்!   ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும்.   நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர்.   ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர்.    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…

எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்

  எங்குமெழுகவே!   அகர முதலுடை அன்னைத் தமிழை இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ! தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே! முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய் அகர முதல யிதழெங்கு மெழுகவே!   – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்

மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை

மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை

தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை                 யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்                 மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ                 ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்                 தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து

– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே அந்த நிலை…

வண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே!

   நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால்,  பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர்.   (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து   மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர்.  இதன் சார்பில்  1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும்…

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட‌ துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌ வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்