திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை

(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்  அதிகாரம் 012. நடுவு நிலைமை     யாருடைய பக்கமும் சாயாமல்,    நேர்மையாக நடக்கும் சமநிலை.   தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்,    பால்பட்[டு] ஒழுகப் பெறின்.             அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப           நடக்கும் தகுதியே நடுநிலைமை.   செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி,     எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து.          நடுநிலையார் வளநலம் வழிவழி        வருவார்க்கும், பாதுகாப்பு…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்

(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்   அதிகாரம் 010. இனியவை கூறல்         கேட்பவர் மனமும் மகிழும்படி,        இனியநல் சொற்களைக் கூறுதல்.   இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம்,      செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல்.            இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல்.   அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து),      இன்சொலன் ஆகப் பெறின்.        மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து        இன்சொல்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்

(அதிகாரம் 008. அன்பு உடைமை  தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல்          உறுபசியுடன் வருகின்ற எவருக்கும்,         விருந்து படைத்தலும் உதவுதலும்.   இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி,      வேள்ஆண்மை செய்தல் பொருட்டு.          இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும்,        நல்உதவி செய்யவுமே ஆகும்.   விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா      மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று.          விருந்தாளர் வெளியில்; சாவினை        நீக்கும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை

(அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்       அதிகாரம் 008. அன்பு உடைமை        உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி    உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம்.    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர்    புன்கண்நீர், பூசல் தரும்.          அன்பை அடைக்கும் கதவுஇல்லை;      அன்பைக் கண்ணீரே, காட்டிவிடும்.    அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார்,    என்பும் உரியர் பிறர்க்கு.            அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார்,     …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 007. மக்கள் பேறு

(அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால்         02. இல்லற இயல்     அதிகாரம் 007. மக்கள் பேறு        ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த,      மக்களைப் பெறுதல் பெரும்பேறு.   பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த      மக்கள்பே(று), அல்ல பிற.        அறி[வு]அறிந்த மக்கள் பேறே,        பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு.        எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப்    பண்(பு)உடை மக்கள் பெறின்.        பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை

(அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி 001 அறத்துப் பால் 02  இல்லற இயல்       அதிகாரம்  005. இல்வாழ்க்கை      குடும்ப வாழ்க்கையின் கடமைகளும்,        அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும்.   இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும்,      நல்ஆற்றின் நின்ற துணை.          பெற்றார், மனைவி, மக்களுக்கு,        இல்வாழ்வான் நவவழித் துணைவன்.   துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும்,      இல்வாழ்வான் என்பான் துணை.          துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு,        இல்வாழ்வான்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்

(அதிகாரம்   003. நீத்தார் பெருமை தொடர்ச்சி)          001 அறத்துப் பால்        01 பாயிர இயல் அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்                     ‘சிந்தனையும், சொல்லும், செயலும்          தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்   சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)      ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?         சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,         வளமும் நலமும் வே[று]இல்லை.   அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,       மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.        அறத்தைவிட, நல்லதும், அதனை         மறத்தலைவிடக், கெட்டதும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 002 வான்சிறப்பு

(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி) 001 அறத்துப் பால்        01 பாயிர இயல் 002. வான்சிறப்பு உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்      மழையின், பயன்களும் சிறப்புக்களும். வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான், தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.      உலகையே நிலைக்கச் செய்வதால்,        மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத், துப்(பு)ஆய தூஉம், மழை.   உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,          உணவாக ஆவதும் மழைதான். விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து), உள்நின்(று) உடற்றும் பசி.    மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு

  01. அறத்துப் பால் 001. அதிகாரம்            01.  பாயிர இயல்           001. இறைமை வழிபாடு  மக்கள் கடைப்பிடிக்கத் தக்க இறைமை ஆகிய நிறைபண்புகள்.   அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி பகவன், முற்றே உலகு.        எழுத்துக்களுக்கு, அகரம் முதல்;        உலகினுக்கு, இறைவன் முதல்.     கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன் நல்தாள், தொழாஅர் எனின்.   தூய அறிவன்வழியைப் பின்பற்றாத  சீரிய கல்வியால், பயன்என்….?   மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்.   மலரைவிட,…

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 3 – வெ.அரங்கராசன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) 3 16.0. வணிகவியல் வரைவிலக்கணம் 16.1. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்      பிறவும் தமபோல் செயின்         [0120] .       வணிகத்திற்கு உரிய இலக்கணத்தை கடைப்பிடித்துப் பிறர் பொருளையும் தம் பொருள் போல மதித்து வணிகம் செய்வார் வணிகம், பெருகும்; பணப்பயனும் பெருகும். 17.0. இத் திருக்குறட் பா இவ் அதிகாரத்தில் ஏன்….? நடுவு நிலைமை அதிகாரத்தில் 0120 — ஆவது திருக்குறட் பாவைத் திருவள்ளுவர் ஏன் அமைத்தார்…..?      …

வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.      அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது.      நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன். முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன். அந்நூலில் இடம்…

சிரியுங்கள் – வெ.அரங்கராசன்

சிரியுங்கள்         [ இடுக்கண் வருங்கால் நகுக –  திருக்குறள் 063:  0621 ]  சிரியுங்கள்…சிரியுங்கள்…. சிந்தை குளிரச் சிரியுங்கள்…. சந்திப்புத் தொடரவே சிந்தித்துச் சிரியுங்கள்…. சிரித்தாலும் சிரியுங்கள்—பிறர் சிரிக்காத போதும் சிரியுங்கள்…. சிரிப்புக்காகச் சிரிக்காமல் சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்…. மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்….. மனத்தை மதித்துச் சிரியுங்கள்….. மனம்விட்டுச் சிரியுங்கள்…. மனம்மகிழ்ந்து சிரியுங்கள்….. நோய்விட்டுப் போக வாய்விட்டுச் சிரியுங்கள்….. காய்விட்டுக் கனிதொட்டுத் தேன்சொட்டச் சிரியுங்கள்…. நொந்துபோன நெஞ்சினிலே வந்துவாழும் நோய்கள் எல்லாம் வெந்து வீழ்ந்து சாகும்படி முந்தி வந்து சிரியுங்கள்….. யாழிசை மழலையின் ஏழிசைச் சிரிப்பே போல வாழும் காலம் எல்லாம் கோலம் கொள்ளச் சிரியுங்கள்….. முதல்நாள் சிரிப்பது போலவே முப்பதாம் நாளும் சிரியுங்கள்…. மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால், முழுமை மனத்துடன் சிரியுங்கள்….. சோகப் பயிர்கள் சாகும்படி சிரியுங்கள்…. சுகம்மிகு பயிர்கள் செழிக்கும்படி சிரியுங்கள்…. சந்தி சிரிக்காமல் இங்கிதம் தெரிந்து சந்தமாய்ச் சிரியுங்கள்…. சந்தனமாய்ச் சிரியுங்கள்…. ஒப்புக்குச் சிரிக்காமல் உண்மையாய்ச் சிரியுங்கள்…. எண்ணத்தில் குழிஏதும் விழாமல் கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்….. ஆணவச் சிரிப்பின் வேரினை அறுத்தெறிந்து பாரினை வென்றிடப் பணிவோடு சிரியுங்கள்…. அசட்டுச் சிரிப்புக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இடம்அறிந்து— வெல்லும் தடம்அறிந்து சிரியுங்கள்….. விரக்திச் சிரிப்பினை விரட்டிவிட்டு—நல்ல நம்பிக்கை வந்[து]உதிக்கத்…