அண்ணா ஒரு வரலாற்று அற்புதம் – பேராசிரியர் வெ. அரங்கராசன்

அண்ணா–ஓர் வரலாற்று அற்புதம்   “உருவுகண்[டு] எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்[கு] அச்[சு]ஆணி அன்னார் உடைத்து”என்னும் பெரும்பொருள் மருவுதிருக் குறள்இது -அண்ணா ஒருவருக்கே பொருந்துகின்ற பெரும்குறள்   காஞ்சி போன தமிழ்நாட்டில் கழனி போல வளம்கொழிக்கக் காஞ்சி தந்தசீர் கார்முகில் கூரறிஞர்; பேரறிஞர் அண்ணா   தேஞ்சி போன தமிழ்நாட்டைச் சீரமைத்துச் சிறப்பேற்றக் காஞ்சி தந்தசீர் திருத்தவாதி களம்கண்ட அரசியல்வாதி   பொடியினைப் போடும் மூக்கு பொடிவைத்துப் பேசும்அவர் நாக்கு – அதில் இழையோடும் நகைச்சுவைப் போக்கு அதிலும் அவர்க்கே அதிக வாக்கு அவரிடம் எவ்வளவு…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை

(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை       தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும்.   வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,      தீமை இலாத சொலல்.            எச்சிறு அளவிலேனும், தீமை          இல்லாதன சொல்லலே வாய்மை.   பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த      நன்மை பயக்கும் எனின்.        யார்க்கும் குற்றம்இலா நன்மையான          பொய்யும், வாய்மையின் இடத்தது.   தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை

(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை.   எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,      கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.     இகழ்ச்சியை விரும்பாதான், எந்த        ஒன்றையும் திருட எண்ணான்.   உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,    கள்ளத்தால் கள்வேம்” எனல்.          “பிறரது பொருளைத் திருடுவோம்”        என்று, நினைப்பதும் திருட்டே..   களவினால் ஆகிய…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை

(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல்  அதிகாரம் 025. அருள் உடைமை   தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.   அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,      பூரியார் கண்ணும் உள.   அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;        பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.   நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்      தேரினும், அஃதே துணை.      எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்        அருளை, நல்வழியில் ஆளுக..   அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்

(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ்   அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல்.   ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது,      ஊதியம் இல்லை உயிர்க்கு.     கொடுத்தலும், கொடுத்தலால் வரும்        புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள்.   உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று),      ஈவார்மேல் நிற்கும் புகழ்.     புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம்,        கொடுப்பார்மேல், வந்து நிற்கும்.   ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை

(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை   எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை.   நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,      குற்றமும் ஆங்கே தரும்.          பிறரது பொருளைப் பறிக்க        விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.   படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,      நடுஅன்மை நாணு பவர்           வருபயன் விரும்பிப், பழிப்புச்        செயல்களை நடுநிலையார் செய்யார்.   சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 017. அழுக்காறாமை

(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி)    01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம்  017. அழுக்காறாமை   பிறரது வளநலங்களைப் பார்த்துப்   பொறாமை கொள்ளாத அறப்பண்பு..   ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து),      அழுக்கா(று) இலாத இயல்பு.          மனத்தாலும், பொறாமை இல்லாத,        இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க.   விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும்,      அழுக்காற்றின் அன்மை பெறின்.          யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே,        ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும்.  …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 016. பொறை உடைமை

(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 016. பொறை உடைமை   பிறரது பிழைகளை — குற்றங்களைப் பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல்.   அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை      இகழ்வார்ப் பொறுத்தல் தலை.          தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும்        நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க.       பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை      மறத்தல், அதனினும் நன்று.           வரம்பு கடந்த குற்றங்களையும்        பொறுத்தலினும், மறத்தலே நன்று.  …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 011. செய்ந்நன்றி அறிதல்

(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி) 01 அறத்துப் பால் 02. இல்லற இயல்    அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல்              பிறரது நல்உதவிகளை மறவாமல்,         நன்றியராய் இருத்தலை அறிதல்.   செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,      வானகமும், ஆற்றல் அரிது.          தான்செய்யாப் போதும், பிறர்செய்        உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா.   காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும்,      ஞாலத்தின் மாணப் பெரிது.          காலத்தே செய்த நல்உதவி,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை

(அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                 02.இல்லற இயல்               அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை     மற்றவன் மனைவியை, மனத்தால்கூட,  முற்றும் விரும்பாத ஆளுமை.   பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து),      அறம்பொருள் கண்டார்கண் இல்.        பிறனது மனைவியை விரும்பும்        அறியாமை, அறத்தாரிடம் இல்லை.   அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை    நின்றாரின் பேதையார் இல்.          பிறனது இல்லாளை விரும்புவோன்,        அறத்தை மறந்த அறிவிலாதோன்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை

(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்.                 02.இல்லற இயல்                  அதிகாரம்   014. ஒழுக்கம் உடைமை   நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும், செய்யும் வாழ்வியல் உயிர்நெறி   ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம்,    உயிரினும், ஓம்பப் படும்     சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை,   உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க.   பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித்     தேரினும், அஃதே துணை.   எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே, காக்க வேண்டிய ஆக்கத்துணை.   ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம்,   …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை

(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                   02.இல்லற இயல்                 அதிகாரம் 013. அடக்கம் உடைமை      ஐந்து புலன்களையும் அடக்கி,    முந்து நல்வழியில் நடத்தல்.   அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை,      ஆர்இருள் உய்த்து விடும்.          அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்;        அடங்காமை, இருளுக்குள் செலுத்தும்.   காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம்,      அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.          உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை,        உயரிய பொருளாய்க் காக்க….