பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும்

பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பு . முதலாளிகள் ஆதிக்க வன்முறையில் சிக்குண்டு தவிக்கும் பெண் தொழிலாளர்கள் நிலையும் அவர்கள் மீது செலுத்தும் சமூக வன்முறையும் கொடியவையாக இருக்கின்றன.  இதில் இரண்டு வகை உண்டு. அலுவலகச்சூழலில் ஏற்படும் சிக்கல்கள், வேலைக்குப் போகும் பெண்களின் பாலியல் துன்பம் என ஆகும். கல்வி கற்று அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பொருளாதாரச் சார்பின்றித் தனித்தியங்கும் நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அலுவல் பொருட்டு வெளியே வந்துவிட்ட பெண்கள் பொதுவாக ஆண்கள் இன்ப நுகர்ச்சிக்குரிய பொருட்களாக…

கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

    தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.    இந்நிலையில் சித்தரரேவு, தாண்டிக்குடி வழியாக ஒரு வழியும், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதை மற்றொரு பாதையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனைப்பயன்படுத்தித் தனியார் பேருந்துகள், தாண்டிக்குடி வழியாகச் செல்கின்ற பேருந்துகள், கொடைக்கானலுக்கு 100 உரூபாயும் பழனி வழியாகச் சுற்றி வருகின்ற வாகனங்கள் 150உரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். ஏற்கெனவே சரக்குச்சிற்றுந்துகள், சிற்றுந்துகள் கொடைக்கானலுக்கு 50உரூபாய் கட்டணம் பெற்றன. தற்பொழுது…

தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

  தேவதானப்பட்டிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முன் எச்சரிக்கையாகச் செய்யப்பட்டு வருகின்றன.. தேவதானப்பட்டிப் பகுதியை இருபிரிவுகளாகப் பிரித்து மருத்துவக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட மருத்துவத் துணை இயக்குநர் காஞ்சனா உத்தரவின்பேரில் சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி   பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகவும் இருந்து காற்பட்டைகள்(டயர்கள்), தேங்கியிருக்கும் கழிவுநீர்க் குட்டைகள், தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்களில் அபேட் மருந்துகளை ஊற்றியும்; திறந்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடக்கோரி விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். மழைக் காலமாதலின் என்புமுறிவு நோய்…

பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர்

தேனிஅருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும்   பேரிடர் உள்ளது. பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் வணிக நிமித்தம் காரணமாகப் பெங்களுர், மைசூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதே போல அண்டை மாநிலமான கேரளாவிற்கும் வேலைக்காகச் சென்றுவிடுவார்கள். வருடத்தில் பொங்கல், இரம்சான், ஈகைத்திருநாள் (பக்கிரீத்து), தீபாவளி முதலான பண்டிகையின்போது மட்டும் அனைவரும் ஒன்று கூடுவார்கள். இந்நிலையில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறைவு உள்ளது. இதனால் பொதுமக்களின் அடிப்படைச்சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி,…

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல்

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல் தேனி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், வடுகப்பட்டி, குன்னூர், உத்தமபாளையம் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல் கடத்தல் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மழை பொழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் மணல் அதிகமாக வருகிறது. இதனைப்பயன்படுத்திப் பொறிஉழுவை, மாட்டுவண்டிகளில், மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டுவண்டி ஒரு வண்டி மணல் உரூ.600க்கும் உழுவைகளில் மணல் உரூ.2000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வருவாய்த்துறை…

கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

தேவதானப்பட்டி அருகே உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மரம் சாய்ந்ததால்; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேவதானப்பட்டி அருகே உள்ள   மலைச்சாலையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மழை பொழிந்தால் அவ்வப்போது பாறைகள் உருளுவதும், மரங்கள் சாய்வதும் வாடிக்கையாக இருக்கும். இந்நிலையில் கடந்த 1 வார காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானல் பகுதியில் நிலச்சரிவும் மண்சரிவும் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மழைக்காலங்களில் சாலைகளில் விழும் கற்களையும் மரங்களையும் அப்புறப்படுத்த உலவூர்தி (ரோந்து வாகனம்) அமைக்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை…

விளைச்சல் நிலம் குறைந்ததால் விற்பனைக்கு அனுப்பபடும் கால்நடைகள்

தேனிப் பகுதியில் விளைச்சல் நிலங்கள் குறைந்ததால் நல்ல நிலையுள்ள மாடுகள் அடிமாட்டிற்காகக் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் வற்றியும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நீரின்றி வறண்டும் காணப்பட்டன. இதனால் கால்நடைகளான ஆடு மாடுகளின் மேய்ச்சல் பரப்பு குறைந்தது. இதனால் உழவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தை வாங்கிக்கொடுக்க முடியாமல் தவித்தனர். மேலும் கால்நடைத் தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வைக்கோல், தீவனப்புல் போன்றவை கிடைப்பது அரிதானது. இதனால்…

தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் – வைகை அனீசு

தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் தனக்கென வாழாப் பிறர்க்குரிய சமூகம் பண்டைய காலத்தில் போற்றுதலுக்குரிய நிலையில் இருந்துள்ளது. தெய்வத்திற்கோ தலைவனுக்கோ ஊருக்கோ தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வீரனை மக்கள் வழிபடுகின்றனர். இப்பொழுதுகூட உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கும் வழக்கம் அனைத்துச் சமயங்களிலும் காணப்படுகிறது. இந்துக்களாக இருந்தால் கோயில்களிலும், முசுலிம்களாக இருந்தால் நாகூர், ஏர்வாடி முதலான அடக்கத்தலங்களிலும் கிறித்தவர்களாக இருந்தால் வேளாங்கண்ணி முதலான கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துவதைக் காணமுடிகிறது. வழக்கமாகப் பூசை செய்யும் இறைவனுக்கு எச்சில்உணவு வழங்கிய திண்ணப்பன் என்ற கண்ணப்பனைச் சிவனும் விழைந்துள்ளார்….

தேனிப் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருட்டு

தேனி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இக்காலம் கோயில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா என எந்த விழாவாக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் கோயில்திருவிழாவின்போது வண்ண வண்ண விளக்குகள், சாலையோரம் குழல்விளக்குகள் போன்றவை கட்டப்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுகிறது….

அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)

தனியார் பள்ளிப்பேருந்துகளில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும்   கண்டம் உள்ளது.   தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.   தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச்…

தேவதானப்பட்டிப் பகுதியில் மின்னியக்கி மூலம் தண்ணீர்த் திருட்டு

தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதிகளில் மின்னியக்கி மூலம் தண்ணீர் திருடப்படுவதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லும் நிலை தடுக்கப்படுகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள வைகை அணைப்பகுதியில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மூலம் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டப்பகுதிகளில் வேளாண் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கானகாணி(ஏக்கர்) பரப்பளவில் வேளாண்மை நடைபெற்று வருகிறது.   திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நெல், கரும்பு, தக்காளி, கத்திரிக்காய் போன்ற…

தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவர்கள் தங்கள் வேளாண் பணியை விட்டுவிட்டுத் தொழில்நகரங்களை நாடிச்சென்றனர். ஒரு சிலர் கூலி வேலைக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். தற்பொழுது மஞ்சளாறு அணை, வைகை அணை போன்ற அணைகள் பாசன வசதிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகிறது. இதனால் உழவர்கள் தங்கள்…