உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல!   பரிபாடலின் முதற்பாடல் இளம்பூரணார் உரையினாலும், பதிற்றுப்பத்துப் பாடல்கள் சில நச்சினார்கினியர் உரையினாலும், பழமொழியின் முதற்பாடல் மயிலைநாதர் உரையினாலும் கிடைத்துள்ளமை மேற்கோள் ஆட்சியின் பயன் அல்லவா? களவியலில் காணப்பட்ட பாடல்கள் பாண்டிக்கோவையைச் சார்ந்தவை என்பதும், சிற்றடக்கம் எனவும் சிற்றடக்கமெனவும் பிழைப்பட வழங்கப்பட்டுவந்த நூற்பெயர் சிற்றெட்டகம் என திருத்தமுற்றதும் களவியற் காரிகையின் மேற்கோள் ஆட்சியினால் அல்லவா? தரவு, கொச்சகம் முதலிய உறுப்புகளின் பாகுபாடு அறிய இயலாதவாறு சிதைந்த நிலையில் கிடைத்துள்ள பரிபாடலில் இரு பாடல்களுக்காவது, உறுப்பமைப்புக் கிடைத்தது…