(தோழர்தியாகுஎழுதுகிறார்  78 தொடர்ச்சி) இலெனின் சுப்பையா என்று சொன்னால் எங்கள் விடுதலைக் குரல் என்று சொல்வோம்! 1985 நவம்பர்க் கடைசியில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நேரம் நண்பராகக் கிடைத்த இளம் வழக்கறிஞர் திரு இராசுகுமார். சட்ட சமூக ஆராய்ச்சி மையம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்காக மொழிபெயர்ப்பு போன்ற சிலவற்றில் உதவுவேன். சிறைப்பட்டோர் விடுதலை தொடர்பான சில வழக்குகளை அவரிடம் கொடுத்து நடத்தச் சொல்வேன். இராசுகுமார் வழியாக எனக்கு அறிமுகமானவர்தான் தோழர் இலெனின் சுப்பையா. சென்னையிலும் புதுவையிலும் மனிதவுரிமை தொடர்பான நிகழ்வுகளில் பாடுவார். அவை கருத்துச் செறிவுமிக்க பாடல்களாக இருக்கும். அவரே பாடல்…