அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் தொடர்ச்சி 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 089. உள்பகை      வெளியில் தெரியாமல், மனத்துள்ளே ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும்,      இன்னாஆம் இன்னா செயின்.      நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்;        நோய்தரும் உறவும், தீமைதான்.   வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக,      கேள்போல் பகைவர் தொடர்பு.       வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல்        நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு.   உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,…