கவிஞன் மோனக் கருக்கலிலே – விண் முத்தொளி தோன்றுகையில் வானக் கடல்கடந்தே – அதை வாங்கிவர விரைவேன்! முத்துப் பனித்துளியில் – கதிர் முத்த மளிக்கையிலே பித்துக் கவிபுனைந்தே – மணம் பேசி மகிழ்ந்திடுவேன்! சாயும் கதிர்களிலே – இருட் சாலம் புரிகையிலே காயும் நிலவெனவே – வழி காட்ட எழுந்திடுவேன்! நீலக் கடல்அலையில் – கதிர் நெய்த வலையிடையே கோலக் குளிர்மணிபோல் – கவி கொட்டிச் சிரித்திடுவேன்! ஊரை எழுப்பிடவே – துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச் சாதி…