உலகத் தாய்மொழிநாள், புதுவைத் தமிழ்ச் சங்கம்

   புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக உலகத் தாய்மொழிநாள் – பாவாணர் பிறந்தநாள் விழா மாசி 16, 2046 / 28-02-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.    புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார்    புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை வகித்தார்   புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்  தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா;  3ஆம் பரிசு 200 உருவா.    நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8.  தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம்  உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் :  தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,  தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009   படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி…

மாய்ப்பதுவா மதவேலை?- முனைவர் க.தமிழமல்லன்

மாய்ப்பதுவா மதவேலை? முனைவர் க.தமிழமல்லன் பாக்கித்தான் பெசாஅவரில் பள்ளிக்குள் சுட்டார்கள் பயனென்ன? நுாற்றுக்கும் மேல்குழந்தை உயிர்பறிப்பால்? ஆக்கித்தான் பார்க்கின்ற அரும்பணியில் இறங்காமல் அறியாத குழந்தைகளை அழித்ததனால் என்னபயன்? போக்குவதால் பல்லுயிரைப் புதுவளர்ச்சி மதம்பெறுமா? போர்க்களத்தில் காட்டாத பெருவீரம் பேதைமையே! நீக்குங்கள் வன்முறையை நிலையான நல்லன்பை நிலவுலகில் விதையுங்கள்! நிலைக்காது மதவெறிகள்! நல்வாழ்க்கை மக்களுக்கு நல்கத்தான் பன்மதங்கள், நாட்டோரை அச்சத்தால் நடுக்குவது மதப்பணியா? கொல்லாத நற்பரிவைக் கொடுப்பதுதான் நன்மதங்கள், கொலைக்களமாய்ப் பள்ளிகளைக் குலைப்பதுவா மதவேலை? பொல்லாத மதப்பிணியால்  கொல்நெஞ்சம் ஆகாமல் புத்தன்பு நீர்கொண்டு புதுக்கிவிடல் மதமன்றோ?…

சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்

    புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி   தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்…

பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்

தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம் ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது. முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது என்றுகல்வியமைச்சர் தியாகராசன் 19.9.2014இல் புருசோத்தமன் ச.ம.உ கேள்விக்குவிடையளிக்கும் போது சட்டமன்றத்தில் சொன்னார். அதைத் திரும்பப்பெற வேண்டும்என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கும் கோரிக்கை 32ஆண்டுக்கோரிக்கைஎன்றும் என்.ஆர். பேராயம் (என்.ஆர்.காங்)சட்டமன்றத்தேர்தலில் அளித்தஉறுதிமொழிகளில் ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்பதாகும் என்பதையும் கல்வியமைச்சரிடம் தமிழமல்லன் எடுத்துக் காட்டி வலியுறுத்திச் சொன்னார். தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கும் உறுதிமொழியை முதல்அமைச்சர் அரங்கசாமி சட்டமன்றத்தில் 2007இல் அளித்துள்ளார் என்றும் எனவே மறுப்பை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் 7.10.2014 அன்று கல்வி யமைச்சர் தியாகராசனிடம் நேரில் வேண்டுகோள் அளிக்கப்பட்டது….

ஆட்சிமொழிக்கருத்தரங்கம் , புதுச்சேரி

  புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆவணி 14, 2045 / ஆக.30, 2014 இல் ஆட்சிமொழிக்கருத்தரங்கம் ஒன்றைநடத்தியது. அதன்தலைவர் வெ.முத்து தலைமை தாங்கினார். செயலர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தனித்தமிழ் இயக்கத் தலைவர்முனைவர் க.தமிழமல்லன் புதுச்சேரியின் ஆட்சிமொழியே என்பதைச் சட்டப்பொத்தகம்அரசாணைகள் சட்டமன்றத்தில் 1965 முன்வடிவு வைக்கப்பட்டபோது ச.ம.உக்கள் அதன்மேல் நிகழ்த்திய உரைகள் முதலியவற்றைச் சான்றுகளாக்கி நிறுவிக்காட்டினார். தமிழுக்கு இதுவரை நன்மை செய்த முன்னாள் முதல்வர்கள் பாரூக், இராமசாமி ஆகியோரைப் பாராட்டியும் பேசினார். இதில் ந.மு.தமிழ்மணி, கல்லாடன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். கடைசியில் விசாலாட்சி நன்றி கூறினார்.  

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…

புதுச்சேரி அரசிடம் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க வேண்டுகோள்!

 புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் ஒன்றைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமி அவர்களிடம் நேரில் அளித்தது. தனித்தமிழ்இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தமிழறிஞர்களுடன் சென்று அளித்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் 32ஆண்டுகளுக்கும் மேல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் தமிழ் மொழி மேம்பாட்டுக்காகவும் இலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வேண்டுகோளில் பல கட்சிகளைச்சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும்…

அறவாணன் விருதுகள் வழங்கு விழா

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா.முனைவர் க.ப. அறவாணன் (பிறப்பு: ஆடி 25, 1972/ஆகத்து 9, 1941) தம் பிறந்த நாளில் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் விருது அளித்துப் பாராட்டி வருகிறார். இவ்வாண்டு, தமிழ்ச்செயல்தொண்டர் நா.அருணாசலம், முனைவர் இராம.இராமநாதன், முனைவர் வேலூர் ம.நாராயணன் ஆகிய சான்றோர்கள் விருதுகள் பெற்றுள்ளனர்.   விழாவின் பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சில :-

அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!

    அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில்   இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு   புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…