குமுக (சமூக) ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு   நாமக்கல் மாவட்டக் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகஆர்வலர் பணியிடத்திற்கு வரும் பிப்பிரவரி 25-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:   குழந்தைகள் தத்தெடுப்பு மாநில ஆதார மையத்தின் மூலம் தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லம் குறித்த நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும் பணியிடம் காலியாக உள்ளது.   இப்பணியிடத்திற்குக் சமூகச் சேவை, குமுகவியல் (சமூகவியல்), உளவியல், குழந்தை வளர்ச்சி, மனையியல் ஆகிய ஏதேனும்…