உ.த.ப.இயக்கம் – நினைவேந்தலும் கலந்தாய்வும்

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம் தொல்காப்பிய அறிஞர் மலேசியா ‘உங்கள் குரல்’ இதழாசிரியர் சீனி நைனா முகம்மது நினைவேந்தல் உலகத் தமிழ்க்கவிதைப்பெருவிழா – கலந்தாய்வு புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சென்னை    

மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது

பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது? மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக் கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது? கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது! கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க் கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது? புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது! கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில் காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது வடிவமின்றி முடிவுமின்றி…

எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…