child-inthe-dustbin

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய

ஆண்டவனுக் கியலாத காரணத்தால்

தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள்

தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால்

எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி

ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா?

தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத்

தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?

seeninainamohzmmed03