தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதனைக்காணும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறையிலிருந்து இந்த அருவியின் இயற்கைத்தோற்றத்தை கண்டு களிக்கலாம். தென்னிந்தியாவிலேயே மிக உயரமான அருவி இந்த எலிவால் அருவி. மூன்று ஆறுகளும் சங்கமித்துத் தலையாறு அருவியாக மஞ்சளாறு அணையை நோக்கிப்பாய்கிறது. இந்த அருவி உயரமாக இருப்பதால் தண்ணீர் விழும் தொலைவில் இருந்து ஏறத்தாழ 5   புதுக்கல் தொலைவு வரை அதன் சாரல் விழுந்து கொண்டே இருக்கிறது. மேலும் தண்ணீர்…