எல்லாம் தமிழிலே! அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சி அன்பு பொழிந்தது தமிழிலே என் சின்னச் சின்ன இதழ்கள் அன்று சிந்திய மழலை தமிழிலே. நிலவு காட்டி அமுதம் ஊட்டிக் கதைகள் சொன்னது தமிழிலே அவள் புலமை காட்டி என்னைத் தாலாட்டி உறங்க வைத்தது தமிழிலே பிள்ளை என்று தந்தை சொல்லிப் பெருமை கொண்டது தமிழிலே நான் பள்ளிசென்றே அகரம் எழுதப் பழகிக் கொண்டது தமிழிலே. பருவம் வந்து காதல் வந்து பாட்டு வந்தது தமிழிலே அவள் உருவம் பார்த்தே உருகும் போதில் உவமை வந்தது…