இலக்குவனார் திருவள்ளுவனுக்கு இரு விருதுகள்

இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதும் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழ்த்தென்றல் திருவிக விருதும்வழங்கப்பட்டன. திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் நல்லுசாமி சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதினை வழங்குகிறார். உடன் முனைவர் செ.அசோகன், தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி, அரங்க திருமாவளவன் உடனுள்ளனர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்தென்றல திருவிக விருதினைப் பேரா.சே.கு.சாந்தமூர்த்தி வழங்குகிறார். பாவலர் மு.இராமச்சந்திரன், தமிழா தமிழா பாண்டியன், அரு.கோபாலன்,தமிழ்ச்செம்மல் நடராசன்…

தமிழ்த் தேசியத் திருவிழா!, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், சென்னை

எங்கள் தமிழ் வாழ்க! தமிழ்த் தன்னுரிமை இயக்கம் முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! தமிழர் திருநாள் பொங்கல் விழா! தமிழ் வல்லார் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழாவெனத் தமிழ்த் தேசியத் திருவிழா! இடம்: செ நா தெய்வநாயகம் பள்ளி, வெங்கடநாராயணன் சாலை, தியாகராயநகர் சென்னை-600017 நாள்: திருவள்ளுவர் ஆண்டு மார்கழித்திங்கள் 26 2054(10/1/2024) புதன்கிழமை மாலை 4:00 மணி கவியரங்கம்: தலைப்பு: வெல்லும் தமிழ்நாடு!  தலைமை: கவிஞர் தாமரைப்பூவண்ணன் ஒருங்கிணைப்பு: கவிஞர் நல்ல…

அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்

அப்படி.. அப்படி! ஆசைகளோடு அலைந்தால் எப்படி? அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி? வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி வசதிகளின்றி குடித்தனம் எப்படி? அசதிகளோடு கிடந்தால் எப்படி? ஆட்டம் விடாது நடந்தால் எப்படி? சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி? சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி? கூடிக் களிக்க மறந்தால் எப்படி? குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி? அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி! வசதிகள் தேடி செய்வாய் அப்படி! கூத்தும் குடியும் விடுவாய் அப்படி குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி.. கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி கற்றாரோடு படிப்பாய்…

அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! – பாவலர் மு இராமச்சந்திரன்

அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! வந்தது போகும் வருவதும் போகும் வாழ்நாள் முழுவதும் வருவதும் போகும் துன்பங்கள் போகும் துயரங்கள் போகும் துய்க்க மறந்தன பலவும் போகும் ஏழ்மையும் போகும் இன்பங்கள் போகும் இருந்து களித்த சுகங்களும் போகும் போகும் போகும் புகுந்தன போகும் புதிதாய் வந்தன பழையதாய்ப் போகும் இளமை போகும் இருந்து உழைத்த உறுதியும் போகும் இல்லாதிருந்த மாற்றங்கள் வாழும்! படைத்தன போகும் பகைகளும் போகும் பழியென சுமந்த காலமும் போகும் அப்படி அப்படி ஆட்சியில் உலகம் அதனுள் இருந்து பழகிடு உவந்தும்…

இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்!- பாவலர் மு. இராமச்சந்திரன்

இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்! அரசென்றால்.. அது அப்படித் தான் இருக்க வேண்டும்! அடுப்படி விறகும் கூட எல்லார்க்கும் பங்கு வேண்டும்! உழைப்போர் பார்த்து உதவும் கரம் நீட்ட வேண்டும்! உதவாதார் கைகள் கட்டி திருத்தும் வழி கூறல் வேண்டும்! அகம்புறமும் ஒன்றாகப் பணியாற்றி நடக்க வேண்டும்! அடிபட்டோர் வாழ உதவிக்கரம் நீட்டிடல் வேண்டும்! தனக்கெனவே அலைவோரை தொலைவிலே நிறுத்த வேண்டும்! தக்கவரைப் பார்த்துத் தேடி முன்கொணர்ந்து நிறுத்த வேண்டும்! மண்மணமும் மாண்புகளும் தாளாது நடத்த வேண்டும்! மக்களெண்ணம் மகிழ்வதற்கே கேடுகளைக் கொய்ய வேண்டும்!…