தோழர் தியாகு எழுதுகிறார் 197 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 3/4 + தொடர்ச்சி) இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4 இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலை பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்பட வில்லை. கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! 2/4 – தொடர்ச்சி) இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4 புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?இவை காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாசக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 சஎதச(ஊபா) வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான சஎதச(ஊபா) வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகக் காரணத்திற்கே பிரிவு 18 பயன்படுத்தப்படுகின்றது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.)…

தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4 – தொடர்ச்சி) இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4 இதைக் கண்டித்து மதுரை வழக்கர் சங்கம்(பார் அசோசியேசன்), தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே கொண்டுவர வேண்டும்; வழக்கறிஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டித்துத் தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தேசியப் புலனாய்வு முகமையையும் சஎதச(ஊபா) சட்டத்தையும் கண்டித்து அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையை தாழி (216) மடலில் வெளியிட்டிருந்தோம். இவ்வறிக்கை மேலும் செப்பம் செய்யப்பெற்று மீண்டும் வெளியிடப்படுகிறது. தெளிவு பெறுங்கள். பிறரையும் தெளிவு பெறச் செய்யுங்கள். ++++ இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா)வின் கீழ்ப்பொய் வழக்கு!அரசவன்முறையின்(பாசிசத்தின்) வன்முறை நிறுவனமாய்த் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!அரசவன்முறையின்பாசிசத்தின் அடக்குமுறைக் கருவியாய் சஎதச(ஊபா)!மோடி அரசின் அரச பங்கரவாதத்தை முறியடிப்போம்! தமிழ்நாட்டில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நடத்திய…

தோழர் தியாகு எழுதுகிறார் 188 : செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 187 : ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு! – தொடர்ச்சி) செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்! அந்தத் தாடிக்காரர் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்த போது நம்புவது கடினமாய் இருந்தது. யார்? தோழர் (இ)லிங்கனா? சிலநாள் முன்பு செய்தியாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் பார்த்தாற்போல் உள்ளதே? என்ன நடந்தது? என்ன? உயர்நீதிமன்ற வளாகத்திலேயே மாரடைப்பால் சாவு நேரிட்டதா? சென்னை நகரத்தில் நான் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் அவரைப் பார்த்துள்ளேன். மிகச் சிறிய அரங்கக் கூட்டமானாலும் தோழர் (இ)லிங்கன் பாசுடின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 187 : ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு!

(தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)- தொடர்ச்சி) ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு! 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால்தான்…

தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)

(தோழர் தியாகு எழுதுகிறார் 185 : ஊபாவின் தொடர் கொடுமைகள்-தொடர்ச்சி) பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித்து, சர்சீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று…

தோழர் தியாகு எழுதுகிறார் 185 : ஊபாவின் தொடர் கொடுமைகள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!- தொடர்ச்சி) த.எ.த. (ஊபா)வின் தொடர் கொடுமைகள் வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு ப.த.(பொடா) சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்(ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளைச் சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது. 2008ஆம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!

(தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! – தொடர்ச்சி) பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களை சேர்த்து புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டி கைது செய்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வழக்குகளுக்கு வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்துச் சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!

(தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் -தொடர்ச்சி) பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! இனிய அன்பர்களே! இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act – சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த…