தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 178- 196

(தமிழ்ச்சொல்லாக்கம் 169 – 177 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 178. பாரகாவியம் – பெருநூல் நூல்   :           திருவிளையாடற் புராண மூலமும் அரும்பதக் குறிப்புரையும் (1905) குறிப்புரை :           முத்தமிழ் இரத்னாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஆங்கிலோ வருணகுலரி இசுகூல் தமிழ்ப் பண்டிதர் ★ 179. புலித்தோலாசனம் –        வேங்கையதள் 180. சோமவாரம்  –        மதிநாள் 181. சரசுவதி        –       வெள்ளைச் செழுமலர்ந்திரு 182. வியாக்கிரபாதன்   –         புலிக்காலோன்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்20 “ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்தானேதும் அறியாமே என்னுள் வந்துநல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்”      — தேவாரம் மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்புடசு மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 169 – 177

(தமிழ்ச்சொல்லாக்கம் 161 – 168 தொடர்ச்சி) யோகநித்திரை – அறிதுயில்அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும் துயிறலும் ஒருங்கு நிகழ்தலான் இது துணைவினையெனப்படும். இதனை யோக நித்திரையென்பர் வடநூலார், நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55 ★ ஆசி – வாழ்த்துஆசி – ஆசிசு என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.மேற்படி நூல் : பக்கம் -285உரையாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு★ (ட்)செரம் – மழித்தல்முகத்திடை நீண்டவுரோமம், நீண்ட முகரோமம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16- 20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15  தொடர்ச்சி)            16.    இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே                 சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே                 செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே                 கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே.            17.    பொன்மான மானாலும் பொருண்மான மானாலும்                 மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும்                 கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார்                 தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர்.            18.    சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந்                 துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார்                 இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான்                 மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்….

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 161 – 168

(தமிழ்ச்சொல்லாக்கம்  151-160  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 161. ஆதாரம்          —        பற்றுக்கோடு 162. கர்வம்  —        பெருமிதம் 163. தாட்சண்ணியம்     —        கண்ணோட்டம் 164. அருத்த சாத்திரம்   —        பொருணூல் 165. தருமசாத்திரம்        —        அறநூல் 166. பத க    —        பெருங்கொடி 167. பகுதி    —        முதனிலை 168. பூரண விசுவாசம்   —        தலையளி நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  52 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்19 தொடர்ச்சி திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விசயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 151 – 160

(தமிழ்ச்சொல்லாக்கம்  141-150  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 151. தரித்திரன்     —        வறியன் 152. நிந்தை            —        வசை 153. சுரோத்திரம் —        செவி 154. சட்சு     —        கண் 155. சிங்குவை      —        நாக்கு 156. புருசார்த்தங்களைக் கூறும் சாத்திரங்கள்     —        உறுதி நூல்கள் 157. அவமானம்    —        இளிவரவு 158. விரோதம்       —        மாறுபாடு 159. பராக்கிரமம் —        ஆண்மை 160. முனிவர்          —        அறவோர் நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10  தொடர்ச்சி)            11.    தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும்                 இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா                 நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால்                 பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர்.  12.    முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை                 விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார்                 நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங்                 கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர்.            13.    அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக்                 கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய்                 அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார்                 எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர்.           …

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 141 – 150

(தமிழ்ச்சொல்லாக்கம்  138 – 140 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 141. ஆசாரம்          —        ஒழுக்கம் 142. வியவகாரம்  —        வழக்கு 143. பிராயச்சித்தம்        —        கழுவாய் 144. பிரத்தியட்சம்           —        கண்கூடு 145. வானப்பிரசுத்தநிலை      —        புறத்தாறு 146. சுதந்தரம்       —        உரிமை 147. அவயவம்       —        உறுப்பு 148. அமிர்தம்         —        சாவா மருந்து 149 நீதி         —        நடுவு 150. முத்தி பெறுதல்       —        வீடுபேறு நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 138 – 140

(தமிழ்ச்சொல்லாக்கம்  133 – 137 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 138. Great world’s Fair – உலகத்துப் பெருஞ்சந்தை இந்துமதத்தையும் இந்துக்களின் தத்துவ ஞானத்தையும் பிற தேசங்களிலுள்ளவர்ளுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற அவா இவருக்கு மிக விருந்தது. இவ்வெண்ண மேற்கொண்டு 1893 ஆம் வருடத்தில் இந்தியாவினின்றுங் கிளம்பி அமெரிக்கா கண்டத்தை நோக்கிச் சென்றார். சிக்காகோ என்னும் நகரத்தையடைந்து ஆங்கு நடந்த ‘உலகத்துப் பெருஞ்சந்தை’ (Great World’s Fair)க்குச் சென்றனர். உலகத்திலுள்ள மதங்கட்கான சபையில் இவரை இந்து மதத்திற்கும் வேதாந்த நிலைமைக்கும் பிரதிநிதியாக அங்குள்ளர்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  52

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  51 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்19 சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் சும்மா இருந்தான் அரவிந்தன். அவனிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதென்று அவனையே இமையாத கண்களால் கவனித்துக் கொண்டு அவரும் நின்றார். அந்தச் சமயத்தில் இடையிடையே பூக்கள் உதிர்ந்து நார் தெரியும் ஒரு உரோசாப் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். “இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன். தொண்டை வறண்டு…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 133 – 137

(தமிழ்ச்சொல்லாக்கம்  129-132 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 133. பட்சி பட்சி – பட்சமுடையது (பட்சம் – இறகு) நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) நூலாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு ★ 134. ஆறு பகை காமம் – ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் – அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் – தானும் அநுபவிக்காமல் பிறர் கொடாமலிருக்கும் குணம், மோகம் – மாதர் மீதுண்டாகுமிச்சை, மதம் – செருக்கு,…