ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி) 1707. வாழ்க்கைப் புள்ளியியல் இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது. உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 111- 117
(தமிழ்ச்சொல்லாக்கம் 106-110 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 111. Room – சிற்றில் அறை – அடி, சொல், சிற்றில் (Room), திரை, பாறை, மறை, மலையுச்சி. நூல் : தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2 நூலாசிரியர் : பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்) ★ 112. விசாலாட்சி – அழகிய கண்ணையுடையவள் நூல் : தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894)…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 49
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 48 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 18 “இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். “இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1701-1706 : இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்,அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 75
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 74. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 106- 110 
(தமிழ்ச்சொல்லாக்கம் 101-105 தொடர்ச்சி) (சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 106. Photo – புகைப்படம் வெகு நேர்த்தியான அமைப்பு! அற்புதமான வேலை! பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும்! தங்க வண்ணமான சாயையுள்ளது!! சிதம்பரம் நடராசர் கோயிலின் புகைப்படம். சிற்சபை, கனகசபை, நிருத்தசபை, முக்குறுணிப் பிள்ளையார் கோயில், தில்லை கோவிந்தராசர் சந்நிதி முதலியனவும் இரண்டு கோபுரங்களுமடங்கியது….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1696 – 1700 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி) 1696. வாந்தியியல் Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல். Emetology 1697. வாயு Aero – வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது….
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 101- 105 
(தமிழ்ச்சொல்லாக்கம் 96-100 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 101. Gas Light – காற்றெரி விளக்கு நீராவியந்திரம் கண்டுபிடித்தவனைப் பைத்தியக்காரனென்று கல்லை விட்டெறியாத பேருண்டோ முதலில்? காற்றெரி விளக்கை (Gas Light) உண்டாக்கினவனை அவன் காலத்தோர் யார்தான் நகைத்துக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 48
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 47 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்18 பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப – ஒருவாற்றான்நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைபஎவ்வாற்றான் உய்வார் இவர். — குமரகுருபரர் மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறாற் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1691 – 1695 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி) 1691. வளைவரை தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Dendroclimatology 1692. வறுமையியல் ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை. Ptochology 1693. வனைமுறை இயங்கியல் Process – செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 74
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 73. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு” என்றான்….
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 96-100
(தமிழ்ச்சொல்லாக்கம் 91- 95 தொடர்ச்சி) அ. Donation – நன்கொடை இந்து கன தனவான்கள் மெம்பர்களாக விருக்கப் பிரியப்படாமற்போனால் நன்கொடை (Donation)களாகவாவது கொடுக்க இட்டப்பட்டால் கொடுத்து வரலாம். இதழ் : சிரீலோரஞ்சனி 15-4-1890, புத். 4, இல – 1 பக். – 8, சி.கோ. அப்பு முதலியார் : (சிந்தாதிரிப்பேட்டை) பத்திராசிரியர். ★ ஆ. Donation – நன்கொடை இந்து மதாபிமான சங்கம். இச்சங்கம் தாபித்து இரண்டு வருடமாகிறது. இதில் மெம்பராய் சேரவேணுமாகில் மாதம் சபைக்கு 4 அணாவும், சங்கத்திற்கு 1 அணா…