வள்ளுவனார் வகுத்தளித்த இன்பப் பொங்கல் வாழ்வினிலே வெற்றிபெற அன்புப் பொங்கல் தெள்ளுதமிழ் நாட்டினிலே எழுச்சிப் பொங்கல் தேமதுர மொழிபரப்பும் உணர்வுப் பொங்கல் உள்ளுகின்ற சிந்தையெல்லாம் வெற்றிப் பொங்கல் ஓதுவது திருக்குறளே அறிவுப் பொங்கல் கள்ளமில்லா உள்ளந்தான் அமைதிப் பொங்கல் கலைகளினை வளர்ப்பதுவே மகிழ்வுப் பொங்கல்! ஆற்றலினை வளர்ப்பதுதான் வாழ்க்கைப் பொங்கல் ஆணவத்தை அழிப்பதுதான் உயர்வுப் பொங்கல் போற்றுவது பெரியோரை கடமைப் பொங்கல் போலிகளை வேரறுத்தல் கல்விப் பொங்கல் மாற்றத்திற்கு வேண்டும்மறு மலர்ச்சிப் பொங்கல் மடமையிருள் ஒழிப்பதற்கு நெருப்புப் பொங்கல் போற்றுவது தாய்மொழியை, பக்திப் பொங்கல்…