புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்

புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்! பெற்றோர்கள் மாணவர்கள் அச்சத்தில்!   தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையில் புசல்லாவ இந்து தேசியக்கல்லூரி மண்சரிவு  கண்டத்தை எதிர்நோக்கியுள்ளது. குறித்த கல்லூரியின்  திடலில் இடி மின்னலுடன் மழை பெய்த வேளையில் ஏறத்தாழ 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாகப் பாடசாலை கட்டடங்களில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். நிலைமை தொடர்பாக   ஊர்ச்சேவகர் ஊடாக உடபளாத்த  பகுதிச் செயலாளருக்கும்   பேரிடர் முகாமைத்துவ நிலையத்திற்கும்…

வீடுகள் வெடிப்பு, நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு

வீடுகள் வெடிப்பு,  நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு     கலஃகா,  மேல் கலஃகா தோட்டத்தில் வீடுகள் பாரிய அளவில் வெடிப்பதினாலும் தாழ் இறங்குவதினாலும் 37 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   குறித்த  பகுதியில் வரிசை இலக்கம் 03, இலக்கம் 04 ஆகியன பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.  வரிசை இலக்கம் 01, வரிசை இலக்கம் 02, 04 குடியிருப்புகள் உள்ள இன்னொரு வீட்டுத் தொகுதி, 02 தனி வீடுகள்…

அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்

அழிந்து வரும் நிலையில்  பேருந்து நிலையம்  கொத்(து)மலை  பகுதிக்குட்பட்ட  ஃகெல்பொட தோட்டம்  ஃகெல்சிரிகம  பகுதியில் காணப்படும்  பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர்.   இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும்  பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர்….

சின்னம் அணிவித்தலும் நீர் வழங்கலும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பாடசாலை மாணவர்களுக்குச் சின்னம் அணிவித்தலும் பாடசாலைக்கான  நீர்  வழங்கலும்       நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர்  வழங்கல் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்குக் கையளித்தல் ஆகிய நிகழ்வு சித்திரை 26, 2047 / மே 09,.2016  அன்று   மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.  இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்,…

மே நாள் தொடர்பான கலந்துரையாடல்

மே நாள்  தொடர்பான கலந்துரையாடல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  மே நாள் நிகழ்வு தலவாக்கலையில் நடைபெற்றது.   அதற்கு முன்னதாக, முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியான மலையக மக்கள் முன்னணியின் மே நாள் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் தலவாக்கலையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முண்னனியின் தலைவரும் கல்வித்துணைஅமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முண்னனியின் செயலாளர் யு. இலாரன்சு,  நாடாளுமன்ற உறுப்பினர் யு.அரவிந்தகுமார், மத்திய மாகாண  அவை உறுப்பினர் சு. இராசாராம்  முதலான  கட்சியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். :

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா

முத்தேர்த் திருவிழா   நுவரெலியா ஆவேலியா  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின்  ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா  சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30  மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது.   ஊர்வலத்தில் கலை  பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின்  செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால்   சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம்,  ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு   மலையகத்தின்  மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின்  நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59  ஆவது பிறந்த  நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள்  அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது

20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம்  நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம்  நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல்…

புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா

புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா   கந்தப்பளை கோட்லொசு தோட்டத்தில் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்குப் புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண  அவை உறுப்பினர்களான ஆர்.  இராசாராம், சோ.,சீதரன், திருமதி சரசுவதி சிவகுரு,  அறக்கட்டளை அமைப்பின் தலைவர் புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.   ஏறத்தாழ  தனித்தனியே 12  இலட்சஉரூபாய்ச் செலவில் அமைக்கப்படும் 23 வீடுகள் தோட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கான நிதி…

தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத்   தலவாக்கலையில் நடாத்துவதற்கு    மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்!   தொழிலாளர்  நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை   இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி  அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …