சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்

சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்   அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.   சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன்.   அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார்

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார் *முதன்முதலாகத் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோ விழா, ஔவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா என ஐந்து விழாக்களைத் தாம் பணியாற்றிவந்த கல்விநிறுவனங்களில் நடத்தித் தமதுமாணவர்களுக்கு மட்டுமன்றி அவர்தம் பெற்றோர்களுக்கும் தமிழுணர்வெழுச்சியைஊட்டியவர் இலக்குவனார் அவர்களேயாவர். *தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு வழங்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி “உளேன் ஐயா” என்று தமிழில் கூறும் வழக்கத்தைக் கொணர்ந்தவர் இலக்குவனாரே. *மக்கள்மன்றத்தில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வண்ணம் தந்தை பெரியார் எழுச்சியுடன் 1948-ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குப் பின் 1949-ஆம்…

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…

எஃகுத்தமிழர் இலக்குவனார் – பொன்.செல்வகணபதி

எஃகுத்தமிழர் இலக்குவனார்   இயற்பெயரிலேயே இலக்கு உடைய எஃகுத் தமிழர் இலக்குவனார்! அன்னைத் தமிழ்மீது ஆசை வைத்தவர் அதைக் காப்பதற்கென்றே மீசை வைத்தார்! பாவின் திறத்தாலே பைந்தமிழ் காத்தவர் பாவேந்தர்! இவரோ நாவின் திறத்தாலே நற்றமிழ் காத்த நாவேந்தர்! · * * * * * பிழைக்கத் தமிழ் படித்தோர் உண்டு தமிழ் படித்துப் பிழைப்பவரும் உண்டு! இவரோ தமிழ் தழைக்கத் தமிழ் படித்த தமிழர்! தமிழ் தழைக்கவே தலை நிமிர்ந்த தலைவர்! வேலை செய்யாமலிருக்க வேலை தேடுவோர் உண்டு! இவரோ வேலை…

இன்றும் இருக்கிறார் இலக்குவனார் – ஈரோடு தமிழன்பன்

இன்றும் இருக்கிறார் இலக்குவனார்   வைகை இலக்குவனார் வாழ்ந்தவரை தட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தமிழ் வெள்ளத்தால் மதுரைத் தென்றல் அவரிடம் மாணவராய் இருந்து புயலாவ தெப்படி என்று பயின்று கொண்டது கண்ணகி எரித்த நெருப்பின் மிச்சத்தில் இந்தித் திணிப்புக்கு எரியூட்டியவர் இலக்குவனார் இயற்றமிழ்மேல் இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் பொறாமை ஏற்பட்டதுண்டு! இயலுக்குக் கிடைத்ததுபோல் ஓர் இலக்குவனார் கிடைக்கவில்லையே என்று! ஏகபோகம் எங்குமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்! ஆனால் புலமை ஏகபோகத்தை எப்படி எதிர்ப்பது? பொழிப்புரை பதவுரைப் புலவரல்லர் அவர், விழிப்புரை உணர்வுரைப் புலவர்! சங்கப் புலவர்…

தமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்

    பேராசிரியர் எங்குப் பணியில் சேர்ந்தாலும், அங்குச் சிறப்புத் தமிழில்தேவைக்கேற்ப இளங்கலை, முதுகலை முதலான வகுப்புகளை அறிமுகப்படுத்துவார். இதுபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலையில் தமிழ் இல்லாமல் இருந்தது. அங்குத் தமிழ் வகுப்பு கொணர்ந்தது குறித்தும் தமிழுணர்வு ஊட்டியது குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப் பண்பு): “மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலை வகுப்பில் (B.A.) தமிழ்ச்சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்குமுன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு…

தமிழ் உரிமை காக்க இலக்குவனார் வேண்டுகோள்!

  தமிழ் உரிமை காக்கப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது குறித்த இலக்குவனார் வேண்டுகோள்! கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத் துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ் உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப்…

பணியின்மையிலும் நேர்மையில் குன்றாத இலக்குவனார்

பணி இல்லாத பொழுதும் மனச் சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி     திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் (பத்தாம்வகுப்பு) வரைதான் பள்ளியில் நடத்தப் பட்டது. பேராசிரியர் வந்த பின்பு தான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம்…

தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி

தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி இலக்குவனார் சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப் பணி ஆற்றுவதோடு நின்றுவிட வில்லை பேராசிரியர். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே ‘என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’ இதழ் வாயிலாக வும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த்தேசியம் என்பதை வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா! உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா!  என்று தமிழக விடுதலை…

புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்

  புதியபார்வை நவம்பர் 16-30 இதழ் இலக்குவனார் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஆசிரியர் : முனைவர் ம.நடராசன் அஞ்சல்பெட்டி எண் 1069 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 பேசி : 044 24997401 / 24980176 மின்வரி :puthiyaparvai@gmail.com வலைத்தளம் : www.puthiyaparvai.com