தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக் குலத்தவராம். கோடரி மண்வெட்டி – கலப்பை குந்தாலி ஏந்துவோரே நாடெலாம் ஆளுகின்ற – உண்மை நாயக ராவாரையா! பாழ் நிலத்தையெல்லாம் – திருத்திப் பண்படுத்தி மக்கள் வாழ் நிலமாகத் – தமிழர் மாற்றிய தாரறியார்? இலங்கை சிங்கபுரம் – பிசிமுதல் இன்னும் பலவான தலங்களின்…