‘‘முல்லை சூடி நறுமணம் முழுகிப் பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள் ஏந்திய வண்ணம் என்னருமை மகள் தனது கணவனும் தானுமாகப் பஞ்சணை சென்று பதைப்புறு காதலால் ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும், முகமல ரோடு முகமலர் ஒற்றியும், இதழோடு இதழை இனிது சுவைத்தும் நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும் பிணங்கியும் கூடியும் பெரிது மகிழ்ந்தே இன்பத்துறையில் இருப்பர் என்று எண்ணினேன். இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு‘ பாழும் கப்பல் பாய்ந்து வந்து என்மகள் மருமகன் இருக்கும் நாட்டில் என்னை இறக்கவே, இரவில் ஒரு நாள்…