(தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002 தொடர்ச்சி) அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் அதானியுடன் தரவு மையப் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் தமிழக அரசு கையொப்பமிட்ட கடந்த காலச் செய்தி ஒன்றின் படி, அதானி என்டர்ப்பிரைசசு, எல்&டி, எசுடிடிசுடிசி,சிடிஆர்எல்எசு, பாரதி ஏர்டெல்லுக்குச் சொந்தமான  நெக்சுட்டிரா ஆகிய பெருநிறுவனங்கள் தமிழக அரசுடன் தமிழ்நாட்டில் தரவு மைய மேம்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளன. தரவு மையம் (இரண்டாம் கட்டம்) எனும் இத்திட்டத்துக்காகச் சென்னையில் அதானி எண்டர்ப்பிரைசசு  2,500 கோடி உரூபாய் (336 மில்லியன் தாலர்) முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் இந்திய அரசு…