யாவும் நீ! கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்             கோவே மன்றில் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை             என்தாய் கண்ணுக் கினியானே தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;             துணைநீ; தந்தை தாயும்நீ; அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;             ஆவி, யாக்கை நீதானே !   தாயுமானவர்: சொல்லற்கரிய: 5