தேனியில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்

தேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்! சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!   தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை.   மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…

கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு!

கந்துவட்டியாளர்களுக்கு  அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு   தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.   அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…

செயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்

dp தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால் நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில்     தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன.  இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில்…

வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல்

வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல் தேனிமாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, நாகர்வள்ளி அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, மஞ்சள் ஆறு பகுதிகளில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன.  பலா, தேக்கு, புளியமரம், நாவல் மரம் முதலான ஏராளமான மரங்கள் உள்ளன. இம்மரங்கள் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள். மரம் வெட்டிக்கடத்தும் கும்பல் உரிமைப்பகுதிகளில்(பட்டாக்காடுகளில்) மரங்கள் வெட்டுவதாக இசைவு பெற்று வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய்…

தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல்

தேனி மாவட்டத்தில் புளி அமோக விளைச்சல்   தேனிமாவட்டத்தில் புளியமரங்களில் புளிகள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. முன்பு, சாலையின் இருபுறமும் இராணிமங்கம்மாள் காலத்தில் நடப்பட்ட புளியமரங்கள் அதிக அளவில் இருந்தன. சாலை விரிவாகத்தின்போது அவை அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. இவை தவிர பொம்மிநாயக்கன்பட்டி, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் பகுதியில் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் புளியம்பழங்களை எடுத்துக் காயவைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்….

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு

அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்வு   தேனிமாவட்டத்தில் அயிரை மீன் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.இருப்பினும் மீன்விரும்புநர்கள் அம்மீன்களை விரும்பி வாங்கி உண்கிறார்கள்.   தேவதானப்பட்டிப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள், கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இயற்கையாக அயிரை மீன், கெழுத்தி மீன் போன்ற மீன்கள் பெருகி உள்ளன. மற்ற மீன்கள் தண்ணீர் செல்லக்கூடிய திசையில் செல்லும் தன்மை உடையது. ஆனால் அயிரை மீன் மற்றும் கெளுத்தி மீன் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் வரும் தன்மை…

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்-ஊராட்சிமன்றத் தீர்மானம்

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் வெடி(பட்டாசு) வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைப்புதூர், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா, காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், நோயாளிகளும், முதியோர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வெடிகளினால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க…

கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள்

கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள்  ஊர் மக்கள் தூங்கமுடியாமல் தவிப்பு  – வைகை அனிசு   தேனிமாவட்டத்தில் உள்ள கன்னிமார்புரத்தில் இரவு நேரத்தில் அகழ்களங்களில்(கற்சுரங்கங்களில்) வைக்கப்படும் வெடிகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர்.    தேவதானப்பட்டி அருகே உள்ள கன்னிமார்புரம், வைகைப் புதூர், தேவதானப்பட்டி கோழிகூப்பிடுகிற ஆலமரம், எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் பல அகழ்களங்ககள் இசைவில்லாமல் இயங்கிவருகின்றன.   இதே போல உத்தமபாளையம் அருகே உள்ள சங்கிலிக்கரடு, ஆண்டிபட்டி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிப்பகம்(கிரசர்) என்ற…

புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் – வைகை அனிசு

தேனிமாவட்டத்தில் புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் தேனிமாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது ஆடு வளர்க்கும் தொழில். நமது நாட்டில் கால்நடைக்கணக்கெடுப்பு இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பேணுகை, பால்வளம், மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. இக்கணக்கெடுப்பு 19191 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 19ஆவது அகில இந்தியக் கால்நடைக் கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டுக் கால்நடைப் பேணுகைத்துறை புள்ளியல் பிரிவு வாயிலாக வெளியிடப்படுகிறது. இக்கணக்கெடுப்பு கால்நடைகளின் இனவளர்ச்சிக் கொள்கைகளை வழிவகுப்பதற்குப் பயன்படுகிறது. கால்நடைகளின் நலவாழ்வு…

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை அனிசு

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள்,…

வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்-வைகை அனிசு

வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையில் பூங்காக்கள் பேணப்படாமல் உள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வைகை அணையில் பொழுது போக்குவதற்காகப் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், இராட்டினம், சறுக்கி விளையாடும் இடம், தொடரி(இரயில்வண்டி), பாரஉந்து போன்ற பொழுது போக்குவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்குத் தனியாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களுக்குத் தனியாக நுழைவுக்கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் வாங்கியும் எந்த வித அடிப்படை வசதியும் பொதுப்பணித்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விளையாடும்…

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு தேனி மாவட்டத்தில் வேளாண்பணிகளுக்கு உழுவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. மேற்குமலைத்தொடர்ச்சியில் பெய்த மழை காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் நிரம்பத்துவங்கியுள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாகத் தரிசாக கிடந்த நிலங்களை உழுது வருகின்றனர் உழவர்கள். நெல், கரும்பு, வாழை முதலானவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் வேளாண்பணிகளுக்கு உழுவைகள் தேவை மிகுதியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகள் வரை உழவு, அறுவடை செய்தல்,…