வெருளி நோய்கள் 116 -120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 106-110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 116 -120 116.) 911 ஆம் எண் வெருளி – Enniakosioihendecaphobia911 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 911 ஆம் எண் வெருளி.911 என்பதன் இறுதிக் கூட்டுத்தொகை 9+1+1= 11; 1+1= 2 என்பதால் எண் இரண்டின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 9, எண் 1 ஆகிய இரண்டு எண்கள் வருவதால் இவ்விரண்டு எண்கள் மீது பேரச்சம் கொள்வோரும் 911 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00117.) 99 ஆம் எண் வெருளி –…

வெருளி நோய்கள் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 106 – 110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 111 -115 111.) 800 ஆம் எண் வெருளி – Octicentumphobia800 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 800 ஆம் எண் வெருளி.எண் 800இல் உள்ள 8 + 0 +0 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 800 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00112.) 87 ஆம் எண் வெருளி – Octokontaheptaphobia/Ogdokontaheptaphobia87 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்…

126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்

(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 126 வால்மீகி இராமாயணம் மூல நூலன்று.  பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்.  திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன்   எலனை…

வெருளி நோய்கள் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 101-105 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 106-110 106.) 700 ஆம் எண் வெருளி- Septicentumphobia700 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 700 ஆம் எண் வெருளி.எண் 700 இல் உள்ள 7 + 0 + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00107.) 71 ஆம் எண் வெருளி – Hebdomekontahenophobia71 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 71 ஆம்…

125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(124.கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை) சனாதனம் பொய்யும் மெய்யும் 125 125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? அடுத்து நாம் பார்க்க வேண்டியது மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா என்பது குறித்து. வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான்….

சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 986-990          986. Audit notes தணிக்கைக்‌ குறிப்புகள்‌ தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும்.  987. Audit of accounts கணக்குகளின் தணிக்கை கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது. கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும். நிறுவனம் அல்லது…

வெருளி நோய்கள் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் தொடர்ச்சி) 101.) 62 ஆம் எண் வெருளி- Hexekontadyophobia62 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 62 ஆம் எண் வெருளி.எண் 62 என்பது வணிகம், பணம் தொடர்பான எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, எதிர்மறை எண்ணத்தில் வணிகத்தில் தோல்வி, பண இழப்பு வரும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.கிரேக்கத்தில் hexḗkonta என்றால் 60, dyo என்றால் 2.00102.) 666 ஆம் எண் வெருளி – Hexakosioihexekontahexaphobia666 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த…

122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123 123. நிறைவான செய்தி என்ன? பக்தியின் பெயரால் ஞானம் என்ற பெயரால் யோகம் என்ற பெயரால் தத்துவம் என்ற பெயரால் ஆன்மீகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னித் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் நான்கு வருணப்பாகுபாடுதான் என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118). சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? – இலக்குவனார் திருவள்ளுவன் இணைய உரை

திருக்குறள் திருவிழா✨ 📚 திருக்குறள் கற்போம், கற்பிப்போம்! -அவையின் 1550ஆவது கொண்டாட்ட விழாத் தொடர் ஆனி 29, 2056 முதல் ஆடி 06, 2056 முடிய 13.07.2025 முதல் – 22.07.2025 முடிய 🌟 தமிழ்ச் சான்றோர் பேரவை🌟 இருநூறாவது சிறப்பு நிகழ்வு 📅 நாள்: ஆனி 29, 2056 / 13.07.2025 ஞாயிறு 🕰 நேரம்: காலை 09:00 மணி 📍 இடம்: தமிழ்த்தேசம் (Clubhouse) ─────────────── 🎤 சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? எனும் தலைப்பில் ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்…

121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!

(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 121 “சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம்.  என்று பேசியுள்ளார். மேலும்,  1912-இல்   பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!  “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”               புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…

119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 தொடர்ச்சி) ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார். “மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத…