தில்லி – தமிழ்க்காப்புக் கழகக் கிளை – இணைய உரை 5

தில்லி தமிழ்க்காப்புக் கழகம் புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 05 மாசி 30, 2057 சனி 14.03.2026 காலை 10.00 சிறப்புரை : வாழ்க்கையும் சட்டமும்: முனைவர் சிவபாலமுருகன் உச்ச நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு

வெருளி நோய்கள் 1229 -1232 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1225 -1228 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1229 -1232 1229.தாய்மாமா வெருளி- Avunculusphobia/Gufuphobia தாய்மாமா குறித்த அளவுகடந்த பேரச்சம் தாய்மாமா வெருளி.தந்தை மைத்துனர் வெருளி/அம்மான் வெருளி – Gufuphobia; தாய்மாமா வெருளி – Avunculusphobia என்று இருவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தந்தை மைத்துனர் என்றால் தாயின் உடன் பிறந்தவர். அப்படியானால், தாய்மாமா. எனவே, இரண்டையும் தாய்மாமா வெருளி என்றே சொல்லலாம்.தங்கை அல்லது தமக்கை மக்களுக்குத் தாய்மாமன்மார் சீர் செய்வதைத் தங்கள் கடமையாகவும் பெருமையாகவும் கருதுவர்.00 தாய்வழி அத்தை தொடர்பான அளவு…

குறட் கடலிற் சில துளிகள் 42 : இனத்தூய்மை கொள்வோம்- இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு!- தொடர்ச்சி) மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௫ – 455) மனம் தூய்மை யாதலும், செயல் தூய்மை யாதலும் தான் சேரும் இனத்தின் தூய்மையால் உருவாகும். பதவுரை:  மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம் – சேர்க்கை; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம். மனத்தூய்மை என்பது மனத்தில் மாசு இன்றி இருத்தல். அஃதாவது தனக்குத் தீமை தரும் என்று கருதும்…

வெருளி நோய்கள் 1221-1224 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1221-1224 சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09 ஒன்றியஅரசை வழிக்குக் கொணரும் திறமை நம்மிடம் இல்லை   தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் ஒழிக்கப்படுவதும் அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்தாலும் கொலைகாரனைத்தான் வரவேற்றுக் குலவுகிறார்களே ஒழிய, ஒன்றிய அரசினர் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கேரளச் செவிலியர்கள் தாக்கப்படும் முன்பே பேரிடர் வரும் என்று கடத்தல் நாடகம்போட்டு மீட்டு வரும் ஒன்றிய அரசு, தமிழ் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்ததுடன் கொலைகாரக் கூட்டாளிகளுடன்…

வெருளி நோய்கள் 1196-1200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1191-1195 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1196-1200 பார்க்காத அலைவரிசையில் பார்க்கவேண்டிய நிகழ்ச்சியைத் தவறவிடுவோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறுகை வெருளி.தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்ற அலைவரிசையில் இன்றியமையா நிகழ்ச்சியைப் பார்க்காமல் போகிறோமோ எனக் கவலைப்படுவர். சில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க எண்ணியிருப்பர். என்ன நிகழ்ச்சி, எந்தத் தொலைக்காட்சி அலைவரிசை என நினைவின்றி அதனைப்பார்க்க இயலவில்லையே எனக் கவலைப்படுவோரும் உள்ளனர்.நிகழ்ச்சி தவறுதல் குறித்த வெருளி என்பதால் தவறுகை வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.இருப்பினும் தவறுகை…

வெருளி நோய்கள் 1191-1195 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1186-1190 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1191-1195 தவறான புரிதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தவறான புரிதல் வெருளி.இத்தகையோர் விதிமுறைகள், வரையறைகள் முதலியவற்றில் தவறான புரிதல் ஏற்பட்டால் கெடுவிளைவு ஏற்படும் என்ற பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர்.00 தவறான வரிசையில் நின்றுவிட்டோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறான வரிசை வெருளி.வரிசையில் நின்றபின், தான் நிற்கும் வரிசை மெதுவாக நகர்வதாகவும் தவறான வரிசையில் நின்றுவிட்டோம், மாடம் அருகில் செல்வதற்கு முன்னர் பயணச்சீட்டு, திரைச்சீட்டு முதலியவை விற்று விடும், என்பனபோன்று அச்சம் கொள்வர். சில சமயங்களில் ஒன்றுக்கு…

வெருளி நோய்கள் 1186-1190 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1181-1185 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1186-1190 தலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலை வெருளி.தலையின் தோற்றம், வடிவம், அழகு, வரக்கூடிய நோய்கள் முதலானவைபற்றிக் கவலைப்பட்டுத் துன்புற்றுப் பேரச்சத்திற்கு ஆளாவது தலை வெருளி.Kefali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தலை.00 உடலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பேரச்சம் கொள்வது தலைகீழ் வெருளி.நோய் வெருளியைப் போன்றதுதான் இதுவும்.Anapoda என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தலைகீழ் எனப் பொருள்.00 தலைக்காப்பி (Helmet) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலைக்காப்பி வெருளி.தலைக் கவிப்பு, தலைக்கவசம், தலை காப்பணி ,தலையணி…

நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 25 சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே! ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. நாலடியார் பாடல் 118 கருத்து: பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!…

வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1181-1185 தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.00 தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் : இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08 வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம்     எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குத், “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய…

வெருளி நோய்கள் 1176-1180 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1176-1180 தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளிதந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.00 தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது…