நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 25 சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே! ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. நாலடியார் பாடல் 118 கருத்து: பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் : இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08 வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குத், “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய…
வெருளி நோய்கள் 1176-1180 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1176-1180 தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளிதந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.00 தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது…
வெருளி நோய்கள் 1171-1175 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1166-1170 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1171-1175 தண்ணீர்ப்பூசணி(Watermelon) பற்றிய அளவு கடந்த பேரச்சம் தண்ணீர்ப்பூசணி வெருளி.தண்ணீர்ப்பூசணி, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகைப்பழம், கோசாப் பழம், தர்பீசு, தண்ணீர்ப் பழம் எனவும் அழைக்கப்படும். பூசணியைப் பூசுனி, பூசனி என்றும் குறிப்பிடுவர்.00 தந்தையுடன் பிறந்த தமக்கை, தங்கை ஆகிய அத்தைமார் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தை உடன்பிறந்தாள் வெருளி.அத்தை என்று சொன்னால், தாயுடன் பிறந்த உடன்பிறந்தவரின் மனைவி என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே,…
வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1166-1170 தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00…
வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1161-1165 புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளிசப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.00 ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல்,…
வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1156-1160 சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.00 சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற பேரச்சம் சோளத் தோசை வெருளி.சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளத்தோசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.Tortilla என்னும் இசுபானியக்கூட்டுச்சொல்(தோசை என்னும் பொருள் கொண்ட tort(a) + மென்மை என்னும் பொருள் கொண்ட ஒட்டுச்சொல் illa)…
வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1151-1155 சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)00 சேறு குறித்த பேரச்சம்…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி) இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு எழுதிய ‘1938 முதல் மொழிப்போரில் பெண்கள்’ நூலாய்வு 2 இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம். வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை, அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும்…
வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1136-1140 பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.00 செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம்…
வெருளி நோய்கள் 1131-1135: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1131-1135 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5
குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி) சூழலால் உருவாவதே அறிவு! மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ – 454) ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும். பதவுரை : மனத்துளது போலக் காட்டி – (ஒருவனின்) மனத்தில் உள்ளதாகத் தோற்றத்தைக் காட்டி; ஒருவற்கு – ஒருவனுக்கு;இனத்துளதாகும் – அவன் சேர்ந்துள்ள இனத்தின் தன்மையாகவே;அறிவு –…
