தமிழ்ப் பெருங்காவலர் வள்ளல் கா.நமச்சிவாயர் – சிறுவை நச்சினியார்க்கினியன்

  வள்ளல் கா.நமச்சிவாயர் என்று விளித்தால்தான் தமிழ் உள்ளங்கள் குளிரும் ஏன்?  வள்ளல் என்று சொன்னால் மட்டும் சில உள்ளங்களுக்கு முழு நிறைவு அளிக்காது. அவரைத் தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாளனுக்கே அறிந்தோர் ஒப்பிடுவர். பௌராணிகக் காலத்தில் தோன்றி இருந்தால் தமிழ் அன்னையே இம்மண்ணுலகில் சில நாள் தங்க எண்ணி வந்தனள் எனக் கூறி இருப்பர். இக் கூற்றுகள் அனைத்தும் உயர்வு நவிற்சியின் பாற்பட்டன அல்லவே அல்ல; முற்றிலும் உண்மை. காரணங்கள் ஆயிரம் ஆயிரம்; உவமைகளோ நூற்றுக் கணக்கின. ஆனால் அந்த வள்ளல் இப்புவியில்…

தமிழ்ப்புலமை பெறுங்கள்! அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்!

பிற துறை  தமிழன்பர்களே! தமிழ்ப்புலமை பெறுங்கள்! அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்!   “தொண்டு செய்வாய் தமிழுக்கு! துறைதோறும்,  துறைதோறும் துடித்தெழுந்தே!” எனப் பாவேந்தர் வேண்டியவாறு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் தொண்டாற்றி வருகின்றனர். தாங்கள் சார்ந்த துறைகளில் தமிழ்ப்பயன்பாடு பெருகவும் உழைத்து வருகின்றனர். எனினும் இத்தகையோருள் பெரும்பான்மையர் தங்களின் தமிழார்வமும் தங்கள் தமிழ்த் தொண்டும் தங்களின் தமிழ்ப்புலமைக்கு அளவுகோல் எனத் தவறாகக் கருதுகின்றனர். கற்றது கைம்மண் அளவு என்பதை மறந்து விட்டுத் தங்களுக்குத் தெரிந்த அளவு தமிழையே உயர்ந்த அளவாகக் கருதிவிடுகின்றனர். எனவே, சொல்லாக்கங்கள், தமிழ்…