(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 016. பொறை உடைமை   பிறரது பிழைகளை — குற்றங்களைப் பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல்.   அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை      இகழ்வார்ப் பொறுத்தல் தலை.          தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும்        நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க.       பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை      மறத்தல், அதனினும் நன்று.           வரம்பு கடந்த குற்றங்களையும்        பொறுத்தலினும், மறத்தலே நன்று.  …