மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து)  உண்டோ ?      நெற்றிதனில்  பிறந்தவராம் பிராமணர்கள்   என்பார்  உற்றதொரு  பெண்குறியும்  தோளதனில்   உண்டோ ?      உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார்  பெற்றதொடை  பெண்குறியும்  பிறங்குவதும்   உண்டோ ?     பொருள்வணிகர்  தோன்றுகுறி  அதுதானாம்  என்பார்.// நிற்கின்ற  தாளதனில்  பெண்குறியும்  உண்டோ ?     நிறையுழைப்புச் சூத்திரர்கள்  பிறந்த  குறி  என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள்  பிறந்தவிடம்  நான்காய்     பேதமையை  விளைவிக்கும்  மனுநூலின்   கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …