புள்ளி விவரங்களை அள்ளிவீசிய முதல்வர்

 jayalalitha04

குசராத்துதான் முதன்மையான மாநிலம் என்பது ஒரு மாய த் தோற்றம் என்றும் பல துறைகளில் குசராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது என்றும் முதல்வர் செயலலிதா புள்ளிவிவரங்களுடன் பேசினார். கிருட்டிணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூசாரிப்பட்டி கூட்டுச்சாலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல்  பரப்புரைக்கூட்டத்தில் முதல்வர் செயலலிதா பேசியதாவது;

சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பா.ச.,  தலைமயர் வேட்பாளரும், குசராத்து முதல்வருமான நரேந்திர மோடி, அ.தி.மு.க.,வை, தி.மு.க., உடன் இணைத்து, ‘இவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவும் இல்லை; அக்கறை செலுத்தவும் இல்லை’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில்   எக்காலமும் எப்பொழுதும், மக்களைப் பற்றி நினைக்கும், ஒரே மக்கள் இயக்கம், அ.தி.மு.க., தான். தமிழகத்தில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு, மக்கள் நலனில், அக்கறை உள்ள அரசா என்பதைக் கணிக்க உதவுவது, பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில், குசராத்தை விட, தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. அதனால் தான், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 நிறை(கிலோ) விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறோம்.

thaali02ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25,000 உரூபாய் நிதி உதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

பட்டம், பட்டயம் படித்தப் பெண்களாக இருந்தால், அவர்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்குவதுடன் 50ஆயிரம்உ ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டணமில்லாக் கல்வி வழங்கப்படுகிறது.

இது தவிர, விலை ஏதுமின்றி பாடப் புத்தகங்கள்பாட ஏடுகள், சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், கருவிப்பெட்டிகள்ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள், மடி கணினி, ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னம்மி, மின்னுரல், மின் விசிறி ஆகியவை விலை ஏதுமின்றி வழங்கப்படுகின்றன.

வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை 500 உரூபாயிலிருந்து ஆயிரம் உரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று உழவர்pasumai-veedu01 பாதுகாப்புத் திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் எனது தலைமையிலான அதிமுக  அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிகளில் ஏழை, எளிய மக்கள் பசியாற மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்படும் “”அம்மா உணவகங்கள்”” ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ammaa-unavakam01காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன. வெளிச் சந்தையில் நிறை(கிலோ) அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

 இவை எல்லாம் ஏழை மக்களை மனத்தில் வைத்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் இல்லாமல் வேறு என்ன?

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக எனது தலைமையிலான அதிமுக  அரசு விளங்குகிறது.

ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள்.

இது போன்று பல துறைகளில் குசராத்தை விட, தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

 * மொத்த மக்கள் தொகையில், 16.6% மக்கள், குசராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.

* குழந்தை இறப்பு விகிதத்தில், தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது; குசராத்து, 11 ஆவது இடத்தில் உள்ளது.

 முற்றிலும் மாறான நிலை

 * தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், 21 குழந்தைகள் மட்டுமே, ஓர் அகவ‌ை அடைவதற்குள் இறக்கின்றன; குசராத்தில், 38 குழந்தைகள் இறக்கின்றன. தாய் இறப்பு விகிதம், 90 என்ற அளவில் உள்ளது; குசராத்தில், 122 என்ற அளவில் உள்ளது.

 * தமிழகத்தில், உற்பத்தித் துறையில் ஈடுபட்டுஇருக்கும் தொழிலாளர்களில், 14.3 % பேர் பட்டதாரிகள்; குசராத்தில், 10 % பேரே பட்டதாரிகள்.

  * பொது வழங்கல் திட்டத்தின் கீழ், அதிக மக்கள் பயன் பெறும் மாநிலம் தமிழகம். இதற்கு முற்றிலும் மாறான நிலைமை, குசராத்தில் உள்ளது.

 * மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகம், மூன்றாவது இடத்தில் உள்ளது; குசராத்து, ஐந்தாவது இடத்தில் உள்ளது.

  * அயலக முதலீட்டை ஈர்ப்பதில், தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2012 – 13 இல் மட்டும், 15 ஆயிரத்து 252 கோடி உரூபாய், அயலக முதலீடு பெறப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில், குசராத்தில்,

 2,676 கோடி உரூபாய் மட்டுமே, அயலக முதலீடாகப் பெறப்பட்டுள்ளது.

* மென்பொருள் ஏற்றுமதியில், தமிழகம், நான்காவது இடத்தில் உள்ளது; குசராத்து, 11 ஆவது இடத்தில் உள்ளது.

 * தமிழகத்தில் உள்ள, மொத்தத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, 36 ஆயிரத்து 996; குசராத்தில் வெறும், 22 ஆயிரத்து 220 தொழிற்சாலைகள் தான் உள்ளன.

 industry01

 * தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, 15.90இலட்சம்; குசராத்தில் உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை, 10.50இலட்சம்.

 * தமிழகத்தில், 2011 – 13 இல், புதிதாகத் தொடங்கப்பட்ட, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை, 1,62,732; குசராத்தில், 1,20,016 தொழில்கள் தான்  தொடங்கப்பட்டன.

 * தமிழகத்தில், 2011 – 12 இல் உணவு தானிய உற்பத்தி, 101.51இலட்சம் கண்டி(டன்); குசராத்தில், 88.74 இலட்சம் கண்டி(டன்). இது போன்று, பல துறைகளில், குசராத்தை விட, தமிழகம் தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இப்போது நான் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள், இந்தியாவில் பலருக்கு, வியப்பை அளிப்பவையாக இருக்கும். பலருக்கு இன்று தான், கண்களைத் திறந்து விட்டதைப் போல் தோன்றும். இது தான் உண்மை நிலை. இதுவரை எல்லாவற்றிலும், குசராத்துதான் முதன்மையான மாநிலம் என்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அது உண்மை அல்ல. குசராத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே, கண்ணும் கருத்துமாக இருந்தது. சேலத்தில் நரேந்திர மோடி பேசும்போது, ‘வாசுபாய் ஆட்சியில்தான், நதிகள் இணைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தமிழகத்தில் குடிநீர்ச்சிக்கல், மின் தட்டுப்பாடு, தீர்வு காணப்பட்டு இருக்கும். தமிழக நதிகள் இணைப்பிற்கு, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். வாசுபாய் ஆட்சி காலத்தில், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்துப் பேசப்பட்டதே தவிர, அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 * தமிழகத்தைப் பொறுத்தவரை, தாமிரபரணி – கருமேனியாறு, நம்பியாறு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு, அ.தி.மு.க., அரசு, 100.96 கோடி உரூபாய் செலவு செய்துள்ளது. முதல், இரண்டாம் நிலைப்பணிகள் நடந்து வருகின்றன. மூன்று, நான்காம் கட்டப் பணிகளை மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 * பெண்ணையாறு – பாலாறு இணைப்புக்காக, 500 கோடி உரூபாய் மதிப்பில், இரண்டு திட்டங்கள்,  உருவாக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின்  இசைவிற்காக, அனுப்பி வைக்கப்பட்ட, 4,000 கோடி உரூபாய் மதிப்பிலான, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை, காங்கிரசு தலைமையிலான, மத்தியக் கூட்டணி அரசு  மறுத்து விட்டது.

  * அதேபோல், மத்திய அரசின்  இசைவிற்காக அனுப்பி வைக்கப்பட்ட, 1,862 கோடி உரூபாய் மதிப்பிலான, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தையும், மத்திய அரசு  மறுத்து விட்டது.

  * ‘இந்த நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தேவைப்படும், 6,500 கோடி  உரூபாயை, தமிழ்நாட்டிற்கு river-link01வழங்குவோம்’ என்ற உறுதியை, பா.ச.க., அளிக்கத் தயாரா?

 * தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்கு இன்றியமையாதது, காவிரியில் அதற்கேற்ற அளவு தண்ணீர் கிடைப்பது. அதற்கு மகாநதி – கோதாவரி – காவிரி இணைப்பு இன்றியமையாதது. இதை நடைமுறைப்படுத்த, பா.ச.,  உறுதி அளிக்கத் தயாரா?

 * இது இருக்கட்டும். ‘காவிரியில், தமிழகத்திற்குரிய நீரை, எந்தத் தடையுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற உறுதியையாவது, பா.ச. அளிக்கத் தயாரா? இதை அந்தக் கட்சி தெளிவுப்படுத்த வேண்டும்; மக்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு, செயலலிதா பேசினார்.

kaaviri01