மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து

நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965   ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித்…

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: மத்திய அரசுக்கு செயலலிதா வற்புறுத்தல்

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத்தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்,  ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான  வாதுரைக்கு மறுமொழி அளித்து முதல்வர்  செயலலிதா பேசியது: “இலங்கைத் தமிழர்கள்  சிக்கல் பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொருத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில்  பன்னாட்டுப் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை…

பழி வராமல் படி – பாவலர் வையவன்

ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…

கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்!

  கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள்  கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான  படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது  இவ்வாறு கூற நேர்கிறது!   உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும்   தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய…

புரட்சியாளர் அறிஞர் அண்ணா

  – தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     பெரியாரின் புரட்சிப் படையில் முதியரும் இளையரும் இருந்தனர். மன்பதைத் தொண்டு செய்த பெரியார் வண்டமிழ் காக்க இந்தி எதிர்ப்புப் போரின் இணையற்ற தலைவரானார். அப்பொழுது அவருக்குத் துணையாகக் கிடைத்த தளபதிதான் அறிஞர் அண்ணா அவர்கள். பெரியாரின் வேம்பனைய புரட்சிக் கருத்துகளை கரும்பனைய சொற்களால் இளைஞர் உள்ளங்களில் இடம்பெறச் செய்தார் அறிஞர் அண்ணா. தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போன்று அறிஞர் அண்ணாவைச் சுற்றி மக்கள் மொய்க்கத் தொடங்கினர். விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்…

கொரண்டிப் பூ!

  இளையவன் – செயா  மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16            29–01–2014 ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய் ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித் தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன் பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச் சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே! மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி இல்லை  எமக்கீடென  எழிலுட …

உரிமை ! – ஈரோடு இறைவன்

விலங்கு வாழ்கிறது காட்டில் விடுதலையோடு! மீன் தண்ணீரில் வாழ்கிறது விடுதலையோடு ! புழு மண்ணில் வாழ்கிறது விடுதலையோடு ! தமிழா நீ வாழ்கிறாயா விடுதலையோடு !

செய்திக் குறிப்புகள் சில

      உலக  மக்கள் தொகையில் எழுத, படிக்கத் தெரியாதவர்களில் 37% இந்தியாவில்தான் இருக்கிறார்கள்  – அனவைருக்குமான கல்வி இயக்க அறிக்கை(EFA Global Monitoring Report, 2013-14)        பெரியாண்டி என்னும் நூறு அகவை மூதாட்டியைப்  பேணும் மதுரை இடையப்பட்டியைச்  சேர்ந்த  6 ஆம் வகுப்பு பயிலும் அருச்சனாவிற்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது.       பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விசாலானி என்கிற சிறுமிக்கும்,       பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற…

கருத்தரங்கம் 3 :இந்தியால் தமிழுக்குக் கேடு…..! – கவிஞர் அரங்கசாமி

இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின் –    பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம் ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால் தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால் வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா? இந்தியா என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா? நேருவைத் தலைவராகக் கொள்வதும் காமராசரைத் தலைவராகக் கொள்வதும் அவரவர் விருப்பம், அதனால் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதன்று. மொழியால் தமிழைப்பெற்று, நாட்டை இந்தியா என்றால், இந்தி மொழி…

திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்துப் பரப்புரை: சீமான்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:   நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.    இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன…

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்.அரசு – ஆளுநர் உரை மூலம் தாக்கு!

  தமிழகச் சட்டப்பேரவை 30.01.14 அன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடியது. சட்டமன்றத்தைத் தொடக்கி வைத்து  அரசின் குரலை  ஒலிக்கும் ஆளுநர்  உரை மூலம் மத்திய காங்.அரசின் புறக்கணிப்பு உணர்வுகள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளாகக் குவிக்கப்பட்டன.   “இலங்கையில் இனவெறிப்  போருக்குப்பின்னர், இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதநேயமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.  இதுவும், இலங்கை இனவெறிப்போரின் இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான சிக்கல்களாக உள்ளன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப்…

உயர்ந்தவர்கள் மூவர் – அன்பு

  தமிழய்யா பத்தாம் வகுப்பு  அ பிரிவைக் கடந்து செல்லும் பொழுது  கணக்கையா யாரையோ அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.   “என்னங்கய்யா, நல்லானையா அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவன் நன்றாகப் படிப்பானே!”   கணக்கையா அடிப்பதை நிறுத்திக் கொண்டு, “நன்றாகப் படித்து என்ன? நல்ல பண்பு இருக்க வேண்டுமல்லவா” என்றார்   பெயருக்கேற்ற  நல்லவன்தான் அவன். “என்ன  நடந்தது” என்றார்.   “போன வகுப்பு இவர்களுக்கு விளையாட்டு. யாருமில்லை. நான் மட்டும் பையை வைத்து விட்டுத் தலைமை ஆசிரியரைப் பார்த்து…