தெய்வமாக விளங்குவீர் நீரே ! – பாரதியார்

  இரும்பைக்  காய்ச்சி உருக்கிடுவீரே ! இயந்திரங்கள்  வகுத்திடுவீரே ! கரும்பைச்  சாறு  பிழிந்திடுவீரே ! கடலில்  மூழ்கி  நன்முத்தெடுப்பீரே ! அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல் ஆயிரம்  தொழில் செய்திடுவீரே  ! பெரும் புகழ்  நுமக்கே  இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு  நீரே !!   மண்ணெடுத்து  குடங்கள்  செய்வீரே ! மரத்தை வெட்டி  மனை  செய்குவீரே ! உண்ணக்  காய்கனி  தந்திடுவீரே ! உழுது  நன்செய்ப் பயிரிடுவீரே ! எண்ணெய்  பால்  நெய்  கொணர்ந்திடுவீரே ! இழையை  நூற்று  நல்லாடை  செய்வீரே…

தொல்காப்பிய விளக்கம் 14 – பேராசிரியர் சி. இலக்குவனார்

(சித்திரை14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி)   76. உப்பகாரம் ஒன்றென மொழிய இருவயின் நிலையும் பொருட்டாகும்மே. உப்பகாரம் = பு, ஒன்று என மொழிப = ஒரு மொழிக்கு ஈறாகும் என்ற கூறுவர். இருவயின் நிலையும் = தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும், பொருட்டாகும் = பொருண்மைத்தாகும். காட்டு: தபு : இஃது ஒலியைத் தாழ்த்திச் சொல்ல ‘நீ சா’ எனத் தன்வினையாகும்; ஒலியை உயர்த்திச் சொல்ல நீ ஒன்றனைக் கொல் எனப் பிறவினையாகப் பொருள்…

கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்

        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு.   இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர்.  இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில்  (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார்.          இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார்.          புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான   கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில்…

பொங்கி வரும் மேநாள் – தமிழ் ஒளி

  “கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” “மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க பொங்கிவந்த மே தினமே!”  

ஓவியக்காரன் – பாவேந்தர் பாரதிதாசன்

ஓவியம் வரைந்தான்-அவன் தன் உளத்தினை வரைந்தான்! ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே ஓவியம் வரைந்தான்! கூவும் குயில்தனைக் கூவா திருத்திக் கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித் தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே ஓவியம் வரைந்தான்! காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான் கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான் ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான் இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான் கோதை…

படத் தொழில் வளர

பாடுமிடம் தெரிந்து பாடவேண்டும் – ஆடுவோர் பாட்டின் பொருள் உணர்ந்து ஆட வேண்டும் – கவிஞன் (பாடும்) பாடும் படக் கலைக்கும் பாடுபட்டோர் தமக்கும் பலருக்கும் பலனளிக்கும் பக்குவ மிருக்கும்படி (பாடும்) கலைஞர்களைக் குழுவாய்க் கூட்ட வேண்டும் – முதலில் கதையமைப்பை விளக்கிக் காட்டவேண்டும் – அந்தக் கருத்தோ டிணைந்து கவிதீட்ட வேண்டும் – அதில் காலத்திற் கேற்ற சுவையூட்ட வேண்டும் – கவிஞன் (பாடும்) ஆடற்கலைக் கழகு உடலமைப்பு-இன்னும் அகத்தின் நிலை விளக்கும் முகக்குறிப்பு பாடற்கலைக் கழகு இசையமைப்பு – கலை பலருழைப்பால்…

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் – பாவேந்தர் பாரதிதாசன்

மந்தையின் மாடு திரும்பையிலே-அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன் துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன் எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி! கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன் தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள் கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்? என்றாள் தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு…

குறவர் – பாவேந்தர் பாரதிதாசன்

காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனள் சாடச் சாட ஒருபுறப் பறை தக தக வென் றாடினாள் போடப் போடப் புதுப் புதுக்கை புதுப் புதுக்கண் காட்டினாள் ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள் தேடத்தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே!