இலக்கு – கார்த்திகை / திசம்பர் மாத நிகழ்வு

  வணக்கம். ‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு.. கார்த்திகை 16, 2045 / 02.12.2014 அன்று மாலை 6.30 மணி’இலக்குக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது..   வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்..   தங்கள் வருகையை எதிர் நோக்கும்.. ப. சிபி நாராயண்.. ப. யாழினி..

ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்

மொழியையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் இனத்தை அழித்துவிடலாம். ஈராயிரம் வருடங்களாகத் தமிழினம் சந்தித்துவரும் அவலம் இது. தமிழனின் கல்வெட்டு என் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது? பழங்கால ஓலைச்சுவடி ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? மொழித் திணிப்பு ஏன் செய்யப்படுகிறது? எழுத்துரு கலப்பு செய்யத் துடிப்பது ஏன்? நம் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளையெல்லாம் வெளியிடாமல் தடுக்கும் சக்தி எது? இன்று நம் முன்னே நிற்கும் கேள்விகள் பல… இன்று நம் முன் இருக்கும் முதன்மையான கேள்வி மொழியறிஞர்களையும், வரலாற்று அறிஞர் பெருமக்களையும் நாம் கொண்டாடுகிறோமா? நாம் யாரையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

  மையக்கருத்துரை   கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி 4.1.1.முதலும் கருவும்               ‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து                அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை                இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து               பிள்ளை உள்வாய்ச் செரீஅய               இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92). இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு….

பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் : கார்த்திகை 9, 10 – 2045 / நவம்பர் 25, 26 – 2014 எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல மின்னிதழ் <www.akaramuthala.in> thiru2050@gmail.com கலை, அறிவியல் படைப்புகள் யாவுமே பயன்பாட்டிற்குரியனவே. எனினும் தமிழ்வளர்ச்சி நோக்கில் பார்க்கும் பொழுது, கல்வியில் அன்றாடப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்க வேண்டும். ‘தமிழறிவியல்’ அல்லது ‘அறிவியல் தமிழ்’ எனத் தனியாகக் கற்பிக்கத் தேவையில்லை. முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்கள் வாயிலாகப் பயன்பாட்டு முறையில்…

அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்

                      அறிவியல் வாசலில் தமிழ்  முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன்  வாய் மொழி. உடற் பிணி குறைய , மனக்குறை  மறைய சமூகம்  பற்றி , சரித்திரம் பற்றி சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ? வளம் உண்டு. நயம் உண்டு –  என்றாலும் அறிவியல் தேடலில் , தேவையில் தேயுமோ தமிழ் மொழி…

மந்தை இல்லை! திருமணமும் இல்லை! – வைகை அனிசு

தேனிப் பகுதியில் மந்தை இல்லாமல் தடைப்படும் திருமணங்கள்   தேனிமாவட்டம் அருகே உள்ள கதிரப்பன்பட்டி, தண்ணீர்ப்பந்தல், அ.வாடிப்பட்டி, கோட்டார்பட்டி முதலான சில சிற்றூர்களில் இன்றும் பழமை மாறாமல் ஊர்மந்தையில் வைத்து திருமணங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.   தற்பொழுது மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப மந்தைகள் பிற பயன்பாடுகளுக்கு வலிந்து உள்ளாக்கப்பட்டமையினாலும் மந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையாலும் திருமணங்கள் தடைப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.  எந்தச் சமூகமாக இருந்தாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்றளவும் உள்ளது. வசதிபடைத்தவர்கள் திருமணம், மண்டபத்தில் நடத்தினாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்று வரை…

நாட்டாண்மைக்கல் – வைகை அனிசு

தேனிமாவட்டத்தில் பாதுகாக்கப்படும் நாட்டாண்மைக்கல்   தேனிமாவட்டத்தில் பகுதியில் நாட்டாண்மைக்கல் இன்றும் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.   பண்டைய காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஓர் ஊரில் கிணறு, குளம், ஆலமரம், கோயில் போன்ற அடையாளங்கள் இருக்கும். இவ்வாறு ஆலமரம் அல்லது அரசமரத்தின் கீழ் ஒரு கல்வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கல்லில் அந்த ஊரில் குடும்பத்தகராறு, வாய்க்கால் வரப்புகள் தகராறு, திருமணத்தகராறு, பாகப்பிரிவினை முதலான அனைத்திற்கும் ஊர் நாட்டாண்மையிடம் அப்பகுதி மக்கள் முறையிடுவார்கள். முறையிட்ட பின்பு குறிப்பிட்ட நாள் குறித்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று…

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனிப் பகுதியில் பேணுகையின்றி இயங்கும் அரசுப்பேருந்துகள்   தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.   சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய…

தேனிச்சந்தையில் எடைமோசடி

தேனிப்பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்   தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   தேவதானப்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். இதனையொட்டி எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், புல்லக்காபட்டி, மஞ்சளாறு அணை, காமக்காபட்டி முதலான பல ஊர்களில் இருந்து தங்களுடைய வாரத்தேவைகளுக்கான காய்கறிகள், பருப்புவகைகள், கிழங்கு வகைகள், ஒன்பான்கூலங்களை(நவதானியங்களை) வாங்கிச்செல்வார்கள்.   வாரச்சந்தைக்கு கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான காய்கறி வணிகர்கள் வருகை…