கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு!
கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…
கலைச்சொல் தெளிவோம் 14 : நாளம்-vascular
நாளம்-vascular வாசுகுலர்(vascular) என்பதற்கு வேளாணியலில் இரத்தக்குழல்சார், சாற்றுக்குழல்சார், எனவும் புவியியலில் சாறுசெல், நாளஞ்சார் எனவும் கால்நடைஅறிவியலில் இரத்தநாள(ம்) எனவும் பயன்படுத்துகின்றனர். சிலர் குழல் என்கின்றனர். உட்துளை உள்ள பொருள்களைக் குழல்(44), குழாய்(6), தண்டு(14), புழல்(14) எனச் சங்கக்காலத்தில் குறித்துள்ளனர். முதல் மூன்று சொற்களும் டியூப்பு(tube), பைப்பு(pipe), சாப்ட்டு(shaft) முதலான பொருள்களில் கையாளப்படுவதாலும் புழல் என்னும்சொல்லை, உட்துளைப் பொருள்களைவிட உள்ளீடான பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதாலும் வேறு சொல்லால் குறிக்க வேண்டும். நாளம் என்பது சங்கஇலக்கியங்களில் கையாளப்படாவிட்டாலும் இரத்தநாளம் என நாளம் குருதிக்குழாயைமட்டுமே…
கலைச்சொல் தெளிவோம் 13 : கற்றை–fascicular
கற்றை–fascicular ஃபசிக்யூலசு(fasciculus) என்பதற்கு மனையியலில் தசைக்கட்டு என்று பயன்படுத்துகின்றனர். பண்டில்(bundle) என்பதைக் கட்டு என்பதால் அதே பொருளை உடைய கற்றை என்பதைப் பயன்படுத்தலாம். சங்கப்பாடல்களில் 3 இடங்களில் கற்றை இடம் பெற்றுள்ளது. தொகுப்பாகத் திரண்டுள்ளதைக் கற்றை என்பதே சரி. கற்றை–fascicular எனவே, வளரியக்கற்றை/ கற்றைவளரியம்- fascicular cambium கற்றையிடை வளரியம்- inferfascicular cambium – இலக்குவனார் திருவள்ளுவன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி) காட்சி –3 அங்கம் : கவிஞர், அன்பரசன், இடம் : கவிஞரது குடில் நிலைமை : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்! வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப : காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி : யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப : …
கலைச்சொல் தெளிவோம் 12 மரவியம் – xylem
மரவியம் – xylem சைலம்(xylem) என்பதற்கு வேளாணியலில் சாற்றுத்திசு என்றும் பயிரியலில் நீர் கடத்துத்திசு/சாற்றுக்குழாய் என்றும் கானியலில் சாற்றுக்குழல் என்றும் குறித்துள்ளனர். சிலர் குழல்திசு என்கின்றனர். பேராசிரியர் அ.கி.மூர்த்தி மரவியம் என்னும் சொல்லை அறிவியல் அகராதியில் குறிப்பிட்டுள்ளார். மரம்(105) என்னும் சங்கச்சொல்லின் அடிப்படையிலான இச்சொல்லையே ஏற்ற சொல்லாகப் பயன்படுத்தலாம். ஆகவே நாள மெய்ம்மியை(xylem) மரவியம் என்றும் பட்டை மெய்ம்மியை(pholem) பட்டையம் என்றும் சுருக்கமாகக் கூறலாம். மரவியம் – xylem பட்டையம் – pholem உள்நோக்குமரவியம்-endarch xylem வெளிநோக்கு மரவியம்-exarch xylem துணை (அல்லது…
கலைச்சொல் தெளிவோம் 11 : வளரியம்-cambium
வளரியம் – cambium காம்பியம்(cambium) என்பதற்கு வேளாணியலிலும் கானியலிலும் வளர்படை என்றும் பயிரியலிலும் மனையியலிலும் வளர்திசு என்றும் பயன்படுத்துகின்றனர். திசு ஒலிபெயர்ப்பு அடிப்படையில் உருவான சொல். வளர்படை என்றால் போர்ப்படை பொருள் வருகின்றது. cambium – அடுக்கியம் என அறிவியல் அகராதி(பேராசிரியர்அ.கி.மூர்த்தி)யில் குறிக்கப் பெற்றுள்ளது, தன்மையின் அடிப்படையில் சரிதான். ஆனால், இச்சொல் தனிச்சொல்லாக இல்லாமல் பிற சொற்களுடன் சேர்கையில் மூலப்பொருள் மாறும் வாய்ப்பு உள்ளது. சான்றாக அடுக்கிய தக்கை என்னும் பொழுது தக்கை அடுக்கடுக்காக வைக்கப்பட்டதாகவே கருதுவர். அடுக்கியம் என்னும் கலைச்சொல்லாகத் தோன்றாது. எனவே,…
கலைச்சொல் தெளிவோம் 10 : அதிரி-vibrio
அதிரி-vibrio அதிர்(14), அதிர்க்கும்(3), அதிர்ந்து(8), அதிர்ப்ப(1), அதிரப்பு (1), அதிர்பட்டு(1), அதிர்பவை(1), அதிர்பு(9), அதிர்வது (1), அதர்வன(1), அதிர்வு(2),அதிர(20), அதிரல்(17), அதிரும்(4) முதலான சங்கச்சொற்களின் அடிப்படையில் நாம் பின்வருமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம். அதிரி-vibrio வைபிரியோ(vibrio) என்பது வளைந்த வடிவமுடைய நுண்ணி(bacteria) என்பதால் வடிவ அடிப்படையில் வளைவி என்று சொல்லலாம். ஆனால், மூலச்சொல் அதன் அதிரும் தன்மையின் அடிப்படையில் குறிக்கப்பட்டிருப்பதால் வளைவி என்பது பொருத்தமில்லை எனத் தவறாக எண்ணலாம். எனவே, மூலச்சொல்லைப்போவே அதிரும் தன்மையின் அடிப்படையில் அதிரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது….
கலைச்சொல் தெளிவோம் 9 : கோளி (பூவிலி) –cryptogam
கோளி (பூவிலி) –cryptogam சங்கஇலக்கியங்களில் உள்ள பயிரியல் செய்திகள் போல் வேறு எந்த அறிவியல் நூல்களிலும் காணஇயலாது. வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி, முதலான பல உறுப்புகளின் வடிவம் தன்மை, முதலான பலவும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இலக்கியம் கூறும் அறிவியல் செய்திகளே மிகுதியாக உள்ளன எனில் உரிய அறிவியல் நூல்களில் மேலும் கணக்கற்ற உண்மைகள் அல்லவா இருந்திருக்கும். ஆல், அத்தி, பலா முதலான பூவாமல் காய்க்கும் மரங்ககளைப் பற்றிச் சங்கநூல்கள் குறிப்பிட்டுள்ளன. சங்கநூல்கள் பூக்காத் தாவரங்களைக்…
உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்
உழவுக்கு வந்தனம் செய்வோம்! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன? உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு. அரசுவேலை வேண்டா…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) அரிமா அடலேறு சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள். அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன் விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி, வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும் உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க வழி உள்ளது அல்லவா? அதுபோல் காதலால் ஏற்படும்…
செயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்
dp தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால் நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன. இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில்…
வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல்
வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தல் தேனிமாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, நாகர்வள்ளி அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை, மஞ்சள் ஆறு பகுதிகளில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள் உள்ளன. பலா, தேக்கு, புளியமரம், நாவல் மரம் முதலான ஏராளமான மரங்கள் உள்ளன. இம்மரங்கள் வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்கள். மரம் வெட்டிக்கடத்தும் கும்பல் உரிமைப்பகுதிகளில்(பட்டாக்காடுகளில்) மரங்கள் வெட்டுவதாக இசைவு பெற்று வருவாய்த்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய்…