கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator இலக்குவனார் திருவள்ளுவன்

65.முடுக்கி-accelerator    ஆக்சிலெரேட்டர் (accelerator) என்பதற்கு உயிரியல், வேதியல், மீனியல்,மனையியில், தகவலியல் ஆகியவற்றில் முடுக்கி என்றும் பொறி யியலில் முடுக்கி என்பதுடன் ஊக்கி என்றும் கையாளுகின்றனர். இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி (மலைபடுகடாம் : 27) என்பதன் அடிப்படையில் முடுக்கி என்ற சொல்லையே சீராகக் கையாளலாம். முடுக்கி-accelerator – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்    இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். – பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)

பல்வகைச் சிறப்புடையது தமிழே!

பல்வகைச் சிறப்புடையது தமிழே!   உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. – சொற் பிறப்பியல் அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் : தமிழ் வரலாறு

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்   கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, பேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், மற்றும் அரபி, உருது, இந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து…

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை   மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி   இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. – மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.   திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172

கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57

திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்

    திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.     செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர்.     தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில்…

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு…

சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க

பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் – வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்

எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சிப் பேரிடர்!

வைகை அணைப்பகுதிச் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.   வைகை அணைப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணியும், எருமலைநாயக்கன்பட்டி, செயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே…