திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி

திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் இந்தியன் ஓவர்சீசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நாள்தோறும் பல கோடி மதிப்பில் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத்து, அமெரிக்கா, ஆங்காங் போன்ற நாடுகளில் வணிகத்திற்காகவும் பணிக்காகவும் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த வங்கியை நாடித் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்தல், காசோலை மாற்றுதல், வரைவோலை எடுத்தல் எனப் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் ஓவர்சீசு வங்கியில் அவ்வப்பொழுது கணிணி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 13– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) காட்சி – 13 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப் பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!) ஆண் :     அழகிய பேடே! பார்த்தாயா? அன்பு மனைவியின் பணிவிடையை! பெண் :     விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்! பார்க்க அழகே! எனச்சொல்வேன்! (என்றே மேடையை நோக்கிய பின்) அதோ! அதென்ன ஒரு கும்பல்! நின்றே கூட்டத்தின் நடுவினிலே உரக்கக் கத்திப் பேசுவதேன்? ஆண் :     பேடை…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]  தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 2 தட்டச்சுப் பொறி:-             1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி…

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது

ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. தாங்கள் செல்லுமிடங்கட்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழர் லிபியை ஒட்டிக் “கிரந்தம்’ என்னும் பெயரில் புதியதோர் லிபி வகுத்தனர் – பரிதிமாற் கலைஞர் : தமிழ்மொழி வரலாறு

உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான்

அழகாய் எனக்குத் தெரிவது உலகில் ஔவை மட்டும் தான் நிழலாய் எனக்குத் தெரிவது காதல் நினைவுகள் மட்டும்தான். புயலாய் எனக்குத் தெரிவது பாரதி பாடிய வரிகள்தான் உயர்வாய் எனக்குத் தெரிவது தாயின் அன்பு மட்டும்தான். கனவாய் எனக்குத் தெரிவது வான எல்லையைத் தொடுவதுதான் தினமும் உழைப்பது தெரிகிற வானை வசப்பட வைப்பதுதான். சிறப்பாய் எனக்குத் தெரிவது மண்ணில் மனிதனாய் வாழ்வதுதான் பிறப்பாய் எனக்குத் தெரிவது புகழைப் பெறுகிற நாளில்தான். உயிராய் எனக்குத் தெரிவது என்றன் தாய்மொழி மட்டும்தான் பயனாய் எனக்குத் தெரிவது வாழ்க்கை பயனுற…

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு  

தமிழ் உணர்வு – காசி ஆனந்தன்

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

தமிழனுக்கு யாவனுளன் ஈடு?

தமிழன் உடற்குருதி சூடு! தமிழன் தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு! இமயம் கடாரமெனும் இடம் பலவென்றவனலவோ தமிழனுக்கு யாவனுளன் ஈடு? தமிழன் தாங்கு புகழைத் தமிழா! பாடு! …உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

மார்ச்சு மாத இற்றைத் திங்கள் நிகழ்வு, அகநாழிகை

வணக்கம் நண்பர்களே,  புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.  போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாகத் தேர்தலில் நின்று மக்கள் பகைவர்களைத் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையைத் தமது இறுதி இலக்குக்காகப் பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது. அதே சமயம் இந்த தேர்தல் முறையில் அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட. பெருவாரியான…

வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு

மாசி 24, 2046 / மார்ச்சு 8, 2015 கிருட்டிணன்கோயில் அருகில் மதுரை இராசபாளையம் சாலை    ஈழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் முகநூலில் எழுதிய “வாய்க்கால் கரையோரம்” புத்தக வடிவில் வெளியிடப்பட இருக்கின்றது… சிங்களவனின் இன வெறியினால் தமிழினம் அடைந்த பாதிப்புகளையும், எதிர்த்துப் போராட வேண்டிய  தேவையையும் உணர்த்திடும் புதினம் இது.