ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….
திருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 079. நட்பு தொடர்ச்சி) 02. பொருள் இயல் 11. நட்பு இயல் அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் வாழ்க்கை முழுதும் கூடவரும் ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல். நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின், வீ(டு)இல்லை, நட்(பு)ஆள் பவர்க்கு. ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில், நட்புக்குப்பின் விடுபடல் கடினம். ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை, தான்சாம் துயரம் தரும். ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு, இறுதியில் சாவுத் துன்பம்தான். …
திருக்குறள் அறுசொல் உரை – 079. நட்பு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 078. படைச் செருக்கு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 079. நட்பு இணைஇலா நலம்தரும் துணையாக விளங்கும் வளர்நட்பின் இலக்கனம். செயற்(கு)அரிய யாஉள நட்பின்? அதுபோல், வினைக்(கு)அரிய யாஉள காப்பு? நட்புபோல் அரியதோர் நல்உறவும், பாதுகாப்பும், வேறு எவை? நிறைநீர, நீரவர் கேண்மை; பிறைமதிப் பின்நீர, பேதையார் நட்பு. அறிஞரின் நட்பு, வளர்பிறை; அறிவிலியின் நட்பு தேய்பிறை. நவில்தொறும்…
திருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 078. படைச் செருக்கு படைவீரரின் வீரப்பண்பு, மான உணர்வு, வெற்றிப் பெருமிதம். என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ முன்நின்று, கல்நின்ற வர். பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர், நின்றார் நடுகல்லாய் நிற்கிறார். கான முயல்எய்த அம்பினில், யானை பிழைத்தவேல், ஏந்தல் இனிது. முயல்குறி தப்பாத அம்பைவிட, யானை தப்பியவேல் சிறப்பு. பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று)…
திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 077. படை மாட்சி நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான வீரப்படையின் சீரும், சிறப்பும். உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே, ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம். உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும், தொல்படைக்(கு) அல்லால் அரிது. அழிவிலும் அஞ்சாப் பெருவீரம், பயிற்சிப் பழம்படைக்கே எளிது. ஒலித்தக்கால் என்ஆம் உவரி..?…