தோழர் தியாகு எழுதுகிறார் 105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)
(தோழர் தியாகு எழுதுகிறார் 104 : போக்கி – தொடர்ச்சி) “வீழ்வது தமிழாக இருப்பினும்…?” இனிய அன்பர்களே! ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனமான சொல்லும் செயலும் கிளறி விட்டுள்ள சிந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டரசின் இறைமைத் தகுநிலை தொடர்பானது. ஒவ்வோராண்டும் சட்டப் பேரவையின் முதல் அமர்வில் ஆளுநர் வாசிக்கும் உரை என்பது மாநில அரசின் கொள்கை அறிவிப்பாக இருப்பதுதான் மரபு. இதில் ஆளுநரின் சொந்தக் கருத்துக்கு இடமில்லை. மாநில அரசு எழுதிக் கொடுக்கும் உரையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அந்த உரையை அப்படியே…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 46,47 & 48 : இணைய அரங்கம்: 21.05.2023
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 46, 47 & 48 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: வைகாசி 07 , 2054 / ஞாயிறு / 21.05.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) “தமிழும் நானும்” – உரையாளர்கள்…
குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?
குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா? தமிழ்நெஞ்சங்களுக்கு, வணக்கம். தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம் நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த 2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல் கடந்த மூன்றாண்டுகளாக இலவச இணையத் திங்களிருமுறையாகத் தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது. எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ எவ்வகையான பொருளிதவியோ வேண்டா. தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால் உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம். பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறள்நெறி குறள் முழக்கம் குறள் விருந்து Thirukkural express அனைத்து மின்னிதழ் களுக்குமான…
தோழர் தியாகு எழுதுகிறார் 104: நலக்கேடு நல்காப் போக்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி) நலக்கேடு நல்காப் போக்கி இனிய அன்பர்களே! பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம். காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது…
தமிழ்நாடும் மொழியும் 39: நாடகத் தமிழ்
(தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – தொடர்ச்சி) நாடகத் தமிழ் தொடர்ச்சி பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால்…
தோழர் தியாகு எழுதுகிறார் 103: ஆளுநர் இரவியா? மு.க. தாலினா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 102 : தமிழ்நாடா? தமிழகமா? தொடர்ச்சி) ஆளுநர் இரவியா? மு.க. தாலினா? இனிய அன்பர்களே! ஆர்.என். இரவியா, மு.க. தாலினா என்ற கேள்வி எழுமானால் நாம் மு.க. தாலின் பக்கம்தான்! பா.ச.க.வா, தி.மு.க.வா என்ற கேள்வி எழுமானால் நாம் திமுக பக்கம்தான்! மு.க. தாலின் மீதும் தி.மு.க. மீதுமான நம் குற்றாய்வுகள் ஆர்.என். இரவியையோ பா.ச.க.வையோ ஞாயப்படுத்தும், அல்லது இரு தரப்புகளையும் நிகர்ப்படுத்தும் நிலைக்கு நம்மைத் தள்ளி விடலாகாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே போது சிக்கல் முழுவதையும் ஆர்.என்….
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4
(புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 3 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 4 நாற்சந்தி – பொதுமக்கள், மோனைப்புலவன்அறுசீர் விருத்தம் முதியோன்1: ஆவதும் அழிவதும் பெண்ணாலேஆன்றோர் பலரும் சொன்னாரேகாவது காக்கும் வலியின்றிக்காளை காதல் வயப்பட்டான்காவலன் மனத்தை அறியாளாய்க்கன்னி காதல் கொண்டிட்டாள்மேவன எண்ணா தரசனுந்தான்மிகையாய்த் தண்டம் வித்திட்டான் எண்சீர் விருத்தம்மோனை: ஆணுக்கும் பெண்ணுக்குங்காத லின்றேல்அன்றுமுதல் இன்றுவரைஉலக மில்லைவீணுக்குப் பெண்ணடிமைஉள்நு ழைத்தார்விடிவிலையே சாதியிழிவுக்கிங்கு மட்டும்நாணுமின்றிச் சுந்தரர்க்குக்காதல் தூதுநடராசர் நடந்ததாகப்புராணஞ் சொல்லும்சாணுக்குங் குறைவானவயிற்றைக் காக்கச்சாற்றிவைத்த தல்லாமல்பயன்வே றுண்டோ…
பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! “தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 இல்”, நாம், “தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!” என வேண்டிக் கட்டுரை எழுதியிருந்தோம். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். “முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன். மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள். பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார். தலைமைச்…
தோழர் தியாகு எழுதுகிறார் 102 : தமிழ்நாடா? தமிழகமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி) தமிழ்நாடா? தமிழகமா? அன்பர் இரவி (பரிவாதினி நூலகம்) கேட்கிறார்: தமிழ்நாடா? தமிழகமா? +++ இரண்டும்தான்! இலக்கியத்தில் இரு பெயர்களும் ஆளப்படுகின்றன. இது வரை கிடைத்துள்ள சான்றுகளின் படி சிலப்பதிகாரம்தான் முதன் முதலாகத் தமிழ்நாடு என்ற பெயரைக் குறிப்பதாக அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுகின்றார்கள். “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை யாயின்…” சிலப்பதிகாரம் வஞ்சிக் காதையில் அமைச்சர் வில்லவன் கோதையின் கூற்றாக இது இடம் பெறுகிறது. கடல்சூழ்ந்த இந்நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர்கள்…
சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3 – தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 2/3 நூற்பணி : புதினங்கள்எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள முனைவர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் புதினம் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் புதினமும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708
(தமிழ்ச்சொல்லாக்கம் 699 -703 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 704. Picture Gallery – ஓவியக்கூடம் பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீசுவரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery)…
தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 8
(தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 8 யமுனா ராசேந்திரன் அன்பர் விசுவுடன் என்னை நேர்கண்டு எடுத்த செவ்வியின் மூன்றாம் இறுதிப் பகுதி இதோ: யமுனா: தமிழ்த் தேசியப் இனப் போராட்டத்தினூடே தென்னிந்தியத் தேசிய இனங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய அரசியல் என்ன நிலைபாடு எடுக்கும்? தியாகு: தேசிய இனங்களில் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன. கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலையாளத் தேசியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது இந்திய…
