பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4 காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி : குடிமக்கள் போற்றும் முடிவேந்து வாழ்க அடிபணிவார் காக்கும் அருள்வேந்து வாழிய நாட்டின் ஒளிவிளக்காம் நங்கை இளவரசி ஏட்டி லெழுதவொணா இன்பமுடன் வாழியவே அரசன் : மங்கையீர் நீங்கள் மதிக்குந் தலைவிதான் பங்கமில் யாப்பைப்…
தோழர் தியாகு எழுதுகிறார் 68 : தமிழீழத் தோழமை
(தோழர் தியாகு எழுதுகிறார் 67 தொடர்ச்சி) தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை தமிழ்நாட்டில் தமிழீழத் தோழமை இயக்கம் சற்றே நலிவுற்ற நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கான முகன்மைக் காரணங்களில் ஒன்று: தமிழ்த் தேசியம் – எதிர் – திராவிடம் எனும் கருத்தியல் பிணக்காகும். இது பல நேரம் கருத்தியல் விவாதம் என்ற எல்லையைக் கடந்து கசப்பான சொற்போராகவும் மாறிவிடக் காண்கிறோம். தமிழக அரசியல் ஆற்றல்கள் தமிழக, இந்திய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழத் தோழமைக் கொள்கையில் ஒன்றுபட்டுப் போராடுவது நமக்கொன்றும் புதிதன்று. 1990ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் திலீபன் மன்றம் நிறுவிய போது “ஈழத் தமிழர்…
முதல்வருக்குப் பாராட்டும் ஆளுநருக்கு நன்றி முறையை நீக்கலும் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் எதிர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வருக்குப் பாராட்டும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான முறையை நீக்க வேண்டலும் நேற்று (பங்குனி 27, 2054/10.04.2023) தமிழ்நாட்டுச்சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதன்மையான நாள். மாநிலத் தன்னாட்சிக்குக் குரல் கொடுக்கும் வரலாற்றிலும் சிறப்பான திருப்புமுனை நாள். மேதகு ஆளுநர் திரு இர.நா.இரவியின் அடாவடித்தனமான போக்கிற்கு எதிராக முதல்வர் மு.க.தாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் சிறப்பிற்குரியது. இத் தீர்மானம் கொண்டு வந்து அவர் ஆற்றிய உரையும் வழியுரையாக அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரையும் சிறப்பானவை. இருவரையும் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம். மேலிட…
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5 – – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 1/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5 வள்ளுவரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா(முதலியார்) அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதையில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின்,…
தோழர் தியாகு எழுதுகிறார் 67 : ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 66 தொடர்ச்சி) ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம் [பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீடு பற்றிய நீதியர் இரவீந்திர பட்டு(Ravindra Bhat) தீர்ப்பின் ஒரு பத்தியைத் தாழி 37ஆம் மடலிலும் இன்னொரு பத்தியை 38ஆம் மடலிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தேன். மண்டல் தீர்ப்பு என்று பெயர் பெற்ற இந்திரா சாகுனி(Indra Sawhney) தீர்ப்பின் முகன்மைக் கூறுகளை இரவீந்திர பட்டு தமது தீர்ப்புரையில் சுருக்கித் தொகுத்துக் கொடுத்துள்ளார். சட்ட அறிவிலும் தமிழாக்கப் பயிற்சியிலும் அக்கறையுள்ள அன்பர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் அந்தத் தொகுப்பை இதோ படைக்கிறேன்:- இட ஒதுக்கீடுகள்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682
(தமிழ்ச்சொல்லாக்கம் 671-676 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 677. Food Machine – உணவுப் பொறி உற்று நோக்கினால் மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் அவ்வப் போதும் உணவுப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுத்தலில் மரஞ் செடி கொடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணவுப் பொறியாகவோ (Food Machine) விளங்கா நிற்கும். நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 55 நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை ★ 678. தயிலசத்து – பசையுடைப் பொருள்கள் அழலுண் பொருள்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 66 : மகிழன் வேண்டுகோள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 65 தொடர்ச்சி) தோழர் மகிழன் வேண்டுகோள்: கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்! இனிய அன்பர்களே! வணக்கம். இது தாழி மடல் – 40. நமக்கு ஒரு நாளிதழ் வேண்டும் என்று சொல்லி அதன் முன்னோடியாகத்தான் தோழர் தியாகு இம்முயற்சியைத் தொடங்கினார். அவரது உழைப்பாலும் உங்களின் ஒத்துழைப்பாலும் தாழி தொடர்ந்து மலர்கிறது. எவ்வளவு இடர்ப்படினும் நாள் தவறாமல் தாழி மடல் உங்கள் கைக்கு வரும் என்பதில் ஐயம் வேண்டா. தாழி மடலின் முகன்மை எழுத்துகளை அச்சிலேற்றி நூல்வடிவாக்க வேண்டும் என்ற முன்மொழிவும் உள்ளது. இதே போல்தான் ஈராண்டுக்கு மேலாக “தமிழ்நாடு இனி” இணைய வழி…
தோழர் தியாகு எழுதுகிறார் 65
(தோழர் தியாகு எழுதுகிறார் 64 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 65 இனிய அன்பர்களே! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நேற்று திறந்த மடல் எழுதினேன். அவர் உடனே விடையனுப்பினார்: “உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை அண்ணல் அம்பேத்துகருக்குச் செய்த துரோகம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சார்ந்திருக்கும் தமு எகச இது குறித்து விரிவான அறிக்கை அப்போதே வெளியிட்டிருக்கிறோம் தோழரே. தங்கள் மடலுக்கு நன்றி.“ அவருக்கு நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். தமுஎகச அறிக்கையை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன். “தேடி அனுப்புகிறேன்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 31
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 30 தொடர்ச்சி) சிதம்பரம் பிள்ளைக்கு அவர்பால் கோபம் உண்டாயினும், “தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறானே; இவ்வளவு பேர்களையும் காப்பாற்ற வேண்டும்?” என்றும், அவர்களுக்கு ஒருவேளை உணவுக்காவது உதவ வேண்டுமென்றும் எண்ணி மூன்று உரூபாய் கொடுத்தார். அப்பொழுது புலவருக்கு வந்த கோபத்தைப் பார்த்தபோது அங்கு நின்ற பலர், “ஐயோ, இவர் சிதம்பரம் பிள்ளையின் மேல் அறம் வைத்துப் பாடிவிடுவாரோ’ என்ற பயத்தாலே கலக்கமடைந்தனர். “நான் பிச்சை எடுக்கவா வந்தேன்? இராசாங்கத்து வித்துவானாகிய என் கௌரவத்தை நீங்கள் அறிந்ததாகத் தெரியவில்லையே” என்று அவர்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 28. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29 குலமும் கோவும் தொடர்ச்சி கங்கைகொண்ட சோழன் இராசேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.103 கடாரம் கொண்டான் கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இாசேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு மாயவரம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 64
(தோழர் தியாகு எழுதுகிறார் 63 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 64 பொநபி (EWS) வழக்கில் எழுதிய தீர்ப்புரையின் முதல் பத்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிர்ந்திருந்தேன். தமிழாக்கம் தொடர்பாகக் கேட்கப்பட்ட விளக்கங்களும் தந்துள்ளேன். அதே தீர்ப்புரையின் இன்னொரு பகுதியில்… இட ஒதுக்கீடு தொடர்பான பழைய வழக்கு ஒன்றில் பெரும்பான்மையுடன் மாறுபட்டு நீதியர் சுப்பா ராவு அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியைப் பட்டு எடுத்துக் காட்டுகிறார். அதையும் ஈண்டு தமிழாக்கத்துடன் பகிர்கிறேன்: “ Article 14 lays down the general rule of equality. Article 16 is an instance of the application of the general rule with special reference to…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம்: 09.04.2023
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 26, 2054 ஞாயிறு 09.04.2023 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்”…
