கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்

பனுவலின் அம்பேத்கர்பற்றிய தொடர் நிகழ்வுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5: 30 மணிக்கு நடைபெறும் இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041. தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442 பங்குனி 15 / மார்ச்சு 29        ஞாயிறு     : ‘தலித் முரசு’ இதழ்களின் கண்காட்சி தோழர். நீலகண்டன் (கருப்புப் பிரதிகள்) தொடங்கிவைப்பு பங்குனி 20 / ஏப்பிரல் 3 வெள்ளி:  அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் – வாசிப்பு அருள்மொழி, பாத்திமா பர்ணாடு, வ. கீதா,…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 17– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி)   காட்சி – 17 அங்கம்      :      ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்       :      குருவிக்கூடு நிலைமை   : (தேர்தல் பற்றிய கருத்துரையைப் பேடைக்கு    நேர்பட சிட்டு உரைக்கின்றது!) ஆண் :      சின்னப்பேடே! சிரிப்பென்ன?                                                                                                            என்ன! கொஞ்சம் சொல்லிவிடேன் பெண் :      தேர்தல் தேர்தல் எனப் பலரோ                     வேர்வை வடியப் படித்திட்டார்!                      சோர்வே எதுவும் இல்லாது                       கூர்மையாய் சுவரில் எழுதிட்டார்!            …

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

 (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]   இந்தியா என்றால் ‘இந்தி’ யா?             நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள் வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பைக் கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு நாம் பொங்கி எழுகிறோமோ…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 3 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு)   “கையேட்டின் அமைப்பு”   போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது.  கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம்.  நிற்க.  பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில்…

தகவலாற்றுப்படை – மாதத் தொடர் சொற்பொழிவுக் கூட்டம்

  தகவலாற்றுப்படை – மாதத் தொடர் சொற்பொழிவுக்  கூட்டம் நாள் :  பங்குனி 27, 2046 /10.04.2015.     அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி)   பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் – தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் – எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு…

தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?

  தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?   இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.  ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…