ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா, மட்டகளப்பு
வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் முன் நுழைவாயில் திறப்பு விழா மட்டகளப்பு களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா ஆனி 16, 2047 / சூன் 30, 2016 அன்று நடைபெற்றது. இந். நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மாநிலக்கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ.இயோகேசுவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாணஅவை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை…
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில், ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த…
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்
பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…
மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்
மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார். அதன் தலைப்பு: கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் 316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ஆசிரியர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள். இவர் முன்னர் வேதிவினையியல் அறிவியலறிஞராக இருந்தவர். இவர் ”Structural Bioinformatics Inc” என்னும் நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராக…
சிறந்த வாழ்க்கை வாழுங்கள் ! – செல்வக்குமார் சங்கரநாராயணன்
சிறந்த வாழ்க்கை வாழுங்கள் ! சிறந்த வாழ்க்கை – சொல்லும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது. நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் பட்டு ழகரத்தைச் சொல்லும்பொழுது அப்பப்பா அந்த தமிழ்ச் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்களும் ஒரு முறை “சிறந்த வாழ்க்கை“ என்று சொல்லித்தான் பாருங்களேன், தற்காலிக இன்பத்தைத் தமிழால் துய்த்து மகிழலாம். அதெல்லாம் சரிதான் அதென்ன சிறந்த வாழ்க்கை? அப்பொழுது சிறப்பில்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதா? என்று நீங்கள் தற்சமயம் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விட்டிருப்பீர்கள். சரி,…
தமிழர் வருக! வருக!- இல.பிரகாசம்
தமிழர் வருக! வருக! தடந்தோள் களிரண்டும் புடைத்திட தமிழர் வருக! வருக! தமிழச்செங்கோல் உயாந்திட தமிழர் வருக வருக! தமிழர் நிலம் செழித்திட தமிழர் செவ்வேல் உயர்த்தி தடமதிர வருக வருக! தமிழ் பண்மொழி காத்திட தமிழர் புகழ்நிலை பெற்றிட தமிழர் வருக வருக! தமிழர் களிப்புற் றிருந்திட தமிழர் சமர்க்களம் வருக! தமிழர் தம்திறம் கொணர்ந்திட தமிழர் ஆர்ப்பரித்து வருக! தமிழ் வீரர்அணி யணியாய் தமிழுரம் கொண்டெழுந்து வருக! தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை தாங்கி அழியாப் புகழ்பெற்றிட திமிரும் அயலான்கொம் பினையடக்க திரண்ட…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 / சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது? அப்போதிருந்த சூழல் என்ன? அவர்கள் செய்தது என்ன? அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன? நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது? அதற்கு…
பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் – கா.பொ.இரத்தினம்
பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் “கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுகள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் “உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது. யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான். -தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்
திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை – கா.பொ. இரத்தினம்
திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை பல துறைகளிலும் மனிதனை மனிதனாக வாழ – பிறர் உதவியின்றி வாழ – தனக்கும் பிறருக்கும் பயன்பட – வழிகாட்டிய தனிச்சிறப்பினாலே தமிழ்மறையை (திருக்குறளை) யாவரும் போற்றத் தொடங்கினர். பிற நாட்டு மக்களும் இதன் பெருமையை அறிந்தவுடன் தம்முடைய மொழிகளிலே மொழி பெயர்த்துத் தம் மக்களும் பயனடையச் செய்கின்றனர். மக்கள் யாவரையும் முழு மனிதராக்கும் தமிழ் மறையைப் போன்று சிறந்தோங்கும் இலக்கிய நூல் இவ்வுலகில் வேறொன்று மில்லை. தமிழ்மறைக் காவலர் கா.பொ. இரத்தினம்
644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா
க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் 5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள் சிறப்பிப்பு மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது. மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….
யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!
யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி! யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள் எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை 7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது. ஆனாலும் இங்குக் கைதிகளின் மன ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி முதலான…
