பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்

    ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…

நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு – சென்னைப்பல்கலைக்கழகம்

  பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016  பிற்பகல் 3.00 தமிழ்த்துறை   விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு

11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்

வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத  புதுமயில் (New Peacock)தோட்ட  மக்களின் வீடமைப்புத் திட்டம்  நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள்,  துயரீடுகள் வழங்கப்படுகின்றன.  மலையகத்திலும் பல்வேறு  பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை  துயரீட்டுப்பொருள்கள்,  உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை.  பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற  சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள்,  துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள்  நிலையாக…

மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் கணிணிப் பிரிவுத் தொடக்கம்

                           கணிணிப் பிரிவுத் தொடக்கம்     மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட கணிணிப் பிரிவினைக் கல்விஅமைச்சர்  வே. இராதாகிருட்டிணன்  திறந்து வைத்தார். இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பா. திருஞானம் – 0777375053 thirunewsfirst@gmail.com

கற்பக விநாயகர் கோயில், இலண்டன் : ஒன்பான் இரவு விழா

  கற்பக விநாயகர் கோயில், இலண்டன் ஒன்பான் இரவு விழா பங்குனி 26, 2047/ 08.04.2016 முதல்   சித்திரை 03, 2047 / 16.04.2016 வரை  

மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் வணிக விழா

வணிக விழாவும் மாணவர்கள் சிறப்பிப்பும்   மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின்  வணிக விழாவும் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும் மாத்தளையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார்.   இதன் போது  வணிகமன்றத்தின் கலை நிகழ்வும் இடம் பெற்றது. இச் நிகழ்விற்குக் கல்வி அதிகாரிகள், மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலிய பெரும் திரளான மாணவிகள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம் – 0777375053

தமிழினியின் இரு நூல்கள் வெளியீடு, கிளிநொச்சி

தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் மறைந்த தமிழினி அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் கூட்டுறவாளர் கல்லூரி மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. வெளியீட்டு உரையை மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்துகின்றார். ‘தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும்’ எனும் தலைப்பில் முன்னாள் போராளி தங்கராசா சுதாகரன் உரையாற்றுகின்றார். முன்னாள் போராளி யாழ்நிதி, ‘ஒரு…

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! – ஏ.எச்.யாசிர் அசனி

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! உதிர்க்கப்பட்ட சொற்களில், உதவி நீட்டுவதல்ல நட்பு, சொற்கள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு. தீமைகளுக்குத் தீனியாய் இருப்பதல்ல நட்பு, தீமைகளைத் தீயிட்டு அழிப்பதே நட்பு. பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டைக் கிளவியாய், இருப்பதல்ல நட்பு, இணைந்தாலும், பிரிந்தாலும் பொருள்தரும், அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு. கலவரங்களுக்குக், கருவாய் இருப்பதல்ல நட்பு, அதனைக், கருவிலேயே கருக்கலைப்பு செய்வதே நட்பு. அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு, நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு . ஏ.எச்.யாசிர் அசனி, இலால்பேட்டை அபுதாபி. தொடர்புக்கு : 0556258851

பட்டினிப்போட்டுக் கொல்வதுதான் நல்லாட்சி அரசின் இலக்கணமா?

விடுதலை ஒன்றே தீர்வு! எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு!   தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து, பன்னாட்டுப் பெண்கள் நாளாகிய 2016 மார்ச்சு 08 அன்று வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூண் முற்றத்தில் காலையிலிருந்து மாலை 4.00 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை நடத்தினர்.  ‘விடுதலை ஒன்றே தீர்வு! வேண்டாம் இங்கு ஏமாற்றுப்பேச்சு’, ‘பட்டினிப்போட்டு கொல்வதுதான்…

மாசிலாக்கருவூலம் – காவிரிமைந்தன்

மானுடம் முழுமைக்கான மாசிலாக்கருவூலம் இட்டது ஈரடிகூட இல்லை! இருப்பினும் தொட்டது வான்புகழ் என்றார்! சொற்களில் சுருக்கம் வைத்து பொருள்தனின் பரப்பை நீட்டும் வையத்தின் பொதுமறை தந்த – திரு வள்ளுவன் புகழ்தான் என்ன? பாலென மூன்றைப் பிரித்து – அதி காரங்கள் நூற்று முப்பத்து மூன்றெனக்கண்டு உலகம் வழக்கத்தில் கொண்டு உள்ள தலைப்புகள்தனிலே குறள்கள் பத்து வாழைதான் குலைதான் தள்ளி வைத்ததைப் போல அழகு வழிவழி வந்தவரெல்லாம் வாசித்து மகிழமட்டுமின்றி.. வழியாய் பூசித்து ஏற்கவைத்தார் வாசுகி கணவர் அன்றோ? ஆக்கமும் ஊக்கமும் அங்கே பாக்களாய்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி   கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கெனவே வேல்லிசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாட்டுக் கொட்டகை அமைத்துதருமாறு கோரியிருந்தர். இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த திரு. சு. இரவிராசன் 20,000 உரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தர். நல்லுள்ளம் கொண்ட இரவிராசனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளர்.   எமது சங்கத்தின் ஊடாக…