மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:– தாண்டன், கோவிந்து தாசு, சம்பூர்ணானந்து, இரவிசங்கர் சுக்குலா, கே. எம். முன்சி ஆகியோர். 2) உருது கலந்த இந்துத்தானி ஆதரவாளர்கள்:- சவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத்து ஆகியோர். இந்தி, தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த திருவள்ளூர்…
இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? நேற்று தமிழ் வளர்ச்சி-பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன், “அரசாங்கம் எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதல் முதன்மைத்துத்தையே அளிக்கும். இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான சட்டப்பூர்வமான முறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படும். எங்களை பொறுத்தவரை மாநிலத்தின் நலனே மிக முக்கியமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தைத் தெரிவித்தமைக்காக அவரையும் அரசையும் அரசை வழிநடத்திச் செல்லும் முதல்வர் ச.சோ.விசய்யையும் பாராட்டுகிறோம். அதே நேரம் அரசிற்கு எதிராகவே தலைமைச் செயலகத்தினர் செயற்படும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்….
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8
தமிழே விழி! தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை – 8 நாள்: வைகாசித் திங்கள் 30 ஆம் நாள் (13 – 6- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: https://meet.google.com/htz-tfer-zpz நெறியாள்கை : திருமதி பிரபா சேகர் அவர்கள் (மொழிபெயர்ப்பாளர், தில்லி) தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,…
வெருளி நோய்கள் 1486-1490: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1481-1485 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1486-1490 வேலையிலிருந்து முதலில் நீக்கப்படலாம் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது வேலை நீக்க வெருளி. சுருக்கமாக நீக்க வெருளி என்கிறோம்.ஆட்குறைப்பு, பணியகம்/தொழிலகம் மூட இருத்தல் போன்ற காரணங்களால் வேலையாள் நீக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் வரும் பெருங்கவலையால் உருவாகும் (வேலை) நீக்க வெருளி. வேலை நீக்கம் தொடரும் முன்பே தன்னை முதலில் நீக்கி விடுவார்கள் என்றும் அஞ்சுவர்.Prima என்னும் கிரேக்கச் சொல் முதலில் என்பதைக் குறிக்கிறது.fora என்பது முதலில் இலத்தீனில் மக்கள் கூடும் அங்காடிகளைக் குறித்தது….
அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை 35: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி) சங்கப்புலவர்கள்பொன்னுரை– 35:அளவுக்குமீறிக் கொள்ளாதே! ”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்பொன்னுங் கொள்ளார் மன்னர்” நற்றிணை – 226. 1-3; பாலை ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர். சொற்பொருள் மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்; வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு,…
குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன்சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – தொடர்ச்சி) குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன் சேர்க! நற்சேர்க்கை போல் சிறந்த துணை இல்லை! நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். (௪௱௬௰ – 460) உலகில் நல்லினம்போல் துணையாய் அமைவது வேறில்லை; தீயினம்போல் துன்பம் தருவது யாதுமில்லை. பதவுரை நல்=நல்ல; இனத்தின்=சேர்க்கையைவிட; ஊங்கு=மேற்பட்ட; துணை=துணை; இல்லை=இல்லை; தீ=தீய; இனத்தின்- சேர்க்கையைவிட; அல்லல்=துயர்; படுப்பதூஉம்=உண்டாக்குவதும்/ தருவதும்; இல்=இல்லை. ‘ஊங்கு’ என்ற சொல்லுக்கு மிக்க,…
வெருளி நோய்கள் 1481-1485: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1476-1480) வெருளி நோய்கள் 1481-1485 1482. நிற்பு வெருளி-Stasibasiphobia/ Stasiphobia/ Stasophobia நிற்றல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் நிற்பு வெருளி.நிற்பு வெருளியில் நடப்பதையும் நடை வெருளியில் நிற்பதையும் சேர்த்தே கூறுகின்றனர்.நிற்க இயலாமல் போகும்பொழுது பாதுகாப்பின்மை குறித்த அச்சம் உருவாகி மருட்சியை உண்டாக்குகிறது. நிற்க இயலாமல் போகும் பொழுது கீழே விழுந்து அடிபடலாம், ஊர்திகளில் சிக்கலாம், மரணமடையலாம் என்றெல்லாம் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.இயலாமைக்கு மருந்து கவலையல்ல. அந்த இயலாமையைப் போக்குவதே. எனவே இது நடை வெருளி(Ambulophobia) போன்றதே. வீழ்பு…
வெருளி நோய்கள் 1476 -1480: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1471-1475) வெருளி நோய்கள் 1476 -1480 நிலைப் பேழைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நிலைப் பேழை வெருளி.மூடிய பேழையைத் திறந்தால் பூதம் வரும் என்பது போன்ற கதைகளைப் படித்தவர்கள் அல்லது கேட்டவர்கள் அதனை உண்மை என நம்பி பேழைமீது பேரச்சம் கொள்கின்றனர்.சிறுஅகவையில் பேழையில் நுழைந்து அது மூடப்பட்டிருந்தாலோ பிறருக்கு இத்தகைய நேர்வு நடந்திருந்தாலோ பேழை மீது பேரச்சம் கொண்டு (நிலைபபேழை வெருளிக்கு ஆளாகின்றனர்.சிறுவகை பேழையும் உள்ளதால் நிலைப்பேழை எனக் குறித்துள்ளோம். சுவர்ப்பேழை மீதும் இதே போன்ற காரணமற்ற அச்சத்தால் வெருளி வரும்.அறைகலன் வெருளி…
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர். த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது…
வெருளி நோய்கள் 1471 -1475: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1466 -1470: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1471 -1475 மாற்றுணா/நிலாச்சோறு (potluck) விருந்து தொடர்பான அளவு கடந்த பேரச்சம் நிலாச்சோறு வெருளி.தனித்தனியே உணவுவகைகளைக் கொண்டுவந்து சேர்த்துப் பகிர்ந்து மற்றவர் உணவை உண்ணுதல் மாற்றுணா விருந்து எனப்படும். பெரும்பாலும் சோறு முதலான மைய உணவு பொதுவாகவும் துணை உணவுகள் பங்கு கொள்வோராலும் அளிக்கப்படுகின்றன.மொய்விருந்து என்னும் பொருள் கொண்ட potlatch என்னும் (வட அமெரிக்க நாட்டின் மரபு மக்களின்) விருந்து முறையில் இருந்து potluck வந்ததாகச் சிலர் கூறுவர். 16 ஆம் நூற்றாண்டில் தாமசு…
வெருளி நோய்கள் 1466 -1470: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1461 -1465: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1466 -1470 நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் காணாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிண்டெண்டோ காணாட்ட வெருளி.நிண்டெண்டோ நிறுவனக் காணாட்டப் பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் காணாட்ட வெருளிநிண்டெண்டோ(Nintendo) நிறுவனம் மிகுதியான காணாட்டங்களை விற்பனை செய்கிறது. இதனைப் பயன்படுத்தும் பொழுது ஒளிரும் விளக்குகளால் வலிப்பு நோய், மன நோய் முதலானவை ஏற்படுவதாக அஞ்சுகின்றனர். எனவே, நிண்டெண்டோ நிறுவனப் பொருள் மீது அளவுகடந்த பேரச்சம கொள்கின்றனர். நூற்றாண்டு பழமை கண்ட நிண்டெண்டோ நிறுவனம் முதலில் சீட்டுக்கட்டுகள் உருவாக்கத்தில்…
நாலடி நல்கும் நன்னெறி 30 . பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை.
(நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 30. பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்பிறப்பினை யாரும் முனியார்; – பிறப்பினுள்பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்நண்பாற்றி நட்கப் பெறின். நாலடியார் பாடல் 174; பொருட்பால் – நல்லினம் சேர்தல் [ இறப்ப நினையும்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள் பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றி நட்க பெறின். ] பொருளுரை:மிகவும்…
