அவனே உயிர்ப்பண் – இராசா இரகுநாதன்

தாயகமே தளையறு ! வளையாது வளரும் பனையே ! யாரை வரவேற்க வானை வளைக்கிறாய்? கார்த்திகைப் பூவே யாரைத் தழுவ -உன் காந்தள் விரல்கள் காற்றில் அலைகின்றன? உப்புக்கடலே! யாரை எதிர்நோக்கி எட்டிஎட்டிக் குதிக்கிறாய்? வன்னிக்காடே யாருக்கு மாலைசூட்ட மலர்ந்து கிடக்கிறாய்? ஆதியாழே! யார் இசைக்க சுரம் கூட்டுகிறாய் ? அமுதத் தமிழே ! எவர் எழுத காத்திருக்கிறாய்? விடுதலைப் பண்ணை! தளையறு ! தாயகமே தளையறு ! அணுக்கள் தோறும் அவன்உயிர்ப்பான் அவனே உயிர்ப்பண் ! இராசா இரகுநாதன்

செயற்கரிய ஆற்றும் பிரபாகரன் – இராசுகுமார் பழனிச்சாமி

நாட்டு நலனுக்காகத் தமிழீழத்தில் அமைந்த துறைகள்! வள்ளுவர் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்ற தமிழனின் பிறந்த நாள் இன்று! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். உரை : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. எல்லாராலும் இப்படி ஒரு செயலை செய்ய இயலாது. பல கோடித் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழினத்திற்கு அடையாளம் தந்தவர், தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டைக் கட்டி அமைத்தவர். அப்படியான ஒரு…

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎

பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்

    பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர் தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த…

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?   திருகோணமலையில் இயங்கிய கமுக்க முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஓர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கமுக்க இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.  யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆசுட்டுவிச்சு படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர்…

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – நேரடி அறிக்கை!

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? –  நேரடி அறிக்கை!   அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியபோதும்…   ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தபோதும்…   தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணஅவை உறுப்பினர்களும் குதிகால் பிடரியில் அடிபட கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் ஓடோடிச் சென்றார்கள். ஓட்டம் என்றால் அப்படியோர் ஓட்டம்! இவர்கள்…

‘நாங்கள்’ யார்? – அ.ஈழம் சேகுவேரா

‘நாங்கள்’ புசிப்பது தசை புணர்வது பிணம் முகர்வது இரத்தம் நாற் சுவர்களுக்குள் நடப்பதை நாற்சந்தியில் நடத்துவோம் அது ‘தாரமாக’ இருந்தாலும், மூலை முடுக்கெல்லாம் தேடி ஒதுங்கமாட்டோம் ‘தங்கை’ ஒருத்தி இருந்தால் அம்மணமாக்கி இரசிப்போம் ‘தோழி’ ஒருத்தி கிடைத்தால் அதிரப்புணர்வோம் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்தால் ‘தாயையும்’ கூட்டாகப் புணர்வோம் ‘அக்காளை’ நீலப்படம் எடுத்து காசு பார்ப்போம் ‘நாங்கள்’ யார்? பிரித்தானியாவின் ‘அலைவரிசை 4’ பார்த்திருந்தால், எங்கள் ‘குலம் கோத்திரம்’ பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை! தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா (இலங்கை, முல்லைத்தீவிலிருந்து) கருத்துகள் மற்றும்…

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.   அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.   இச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின்…

இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

  இராசபக்சவை வீழ்த்தியது எது?   “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….”  இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள்.  அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…

சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! – கண்ணன் நாகராசு

சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்!   தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!  கண்ணன் நாகராசு

புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு

புத்த வெறியல்ல… இரத்த வெறி!   பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது.    எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…