பிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு

   பிரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு ‘ஞயம்பட வரை’ போட்டியின் பரிசளிப்பு விழா பங்குனி 27, 2047 /  ஏப்பிரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை  புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை  (டிசுகவரி புக் பேலசு)  , சென்னை  

அமுதசுரபி ஆண்டு விழா

  அமுதசுரபி ஆண்டு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் :  தவுட்டன் உணவகம்( Doveton Cafe), 5- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை நூல்கள் வெளியீடு செப்பேடு பாவலர் கருமலைத்தமிழாழன் மரபுக் கவிதை நூல். அன்புள்ளமே முனைவர் கோமதி கேசவன் புதுக்கவிதை நூல். நம் அமுதசுரபி மாத இதழ் அமுதசுரபி கவிதைகள் முகப்புத்தகத்தில் தேர்ந்தெடுத்த 100 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. கவிதை அரங்கம், கலந்துரையாடல்,…

சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா

  சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா பங்குனி 31, 2047/  ஏப்பிரல் 13, 2016 மாலை 5.00 உரோசா முத்தையா மன்றம், தரமணி, சென்னை பாரதி புத்தகாலயம்

கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம், போர்ட்பிளேயர், அந்தமான்

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2015  அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்  நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது. கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கிற்குத் தாங்கள் வருகை…

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்

பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30,  சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய  வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்

சித்திரைக் கலைவிழா- போட்டிகள், காட்டுப்பாக்கம், சென்னை

  ” உலகத் தமிழார்வலர்கள் “   தமிழ் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியம் வரைதல், கதை சொல்லும் போட்டி, இந்தியப்பரம்பரை  உடைகள். தமிழ் மீது ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்

இயற்கை வேளாண் கருத்தரங்கம், பாலையூர், குத்தாலம்

  தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் திரு. அ.அம்பலவாணன் தலைமையில் நம்மாழ்வார் அவர்களின் 78 ஆவது பிறந்த நாள் விழா பங்குனி 24, 2047 / 06.04.2016 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் குத்தாலம் வட்டத்தில் உள்ள பாலையுரில் நடைபெற உள்ளது.   இவ்விழாவில் இயற்கை வேளாண்மை குறித்தும் நம்மாழ்வாருடைய கொள்கை – திட்டங்களை எடுத்துச் செல்வது குறித்தும் ஒரு விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நம்மாழ்வார் அவர்களோடு பல ஆண்டு காலம் பணி செய்த முன்னோடிகளும்…

நுவரெலியாவில் இளவேனில் இசைவிழா

  எதிர்வரும் நுவரெலியா  இளவேனில் காலத்தை முன்னிட்டுத் தென்னிந்தியாவின்   புகழ்மிகு இசைக்குழுவான ஆசான்(ஈனோக்கு) இன்பராகம் (Enoch Rhythms) இசைக்குழுவினரின் தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் இன்பஇராகங்கள் இசை நிகழ்ச்சி  சித்திரை 03, 2047 / 16.04.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா  திடலில்   நடைபெறவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே முன்னிலையில் ஈனோக்குஇசைக்குழுவின் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. ஆசான் (ஈனோக்கு) இன்பராகம் குழுவினரின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு நாளான சித்திரை 01, 2047 / 14.04.2016 அன்று …

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016  காலை 10.00 – இரவு 10.00 கோயம்புத்தூர்    தமிழ்நாடு சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம்

வளரி – சூல் வாசிப்புத்தளம் வழங்கும் கவிப்பேராசான் மீரா விருது

பங்குனி 21, 2047  / ஏப்பிரல் 03, 2016 காலை 10.00 மதுரை   வழங்குநர் : பேரா.கவிஞர் ஆதிராமுல்லை மீரா படத்திறப்பு : பேரா.தி.சு.நடராசன் அன்புடையீர், வணக்கம். கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு தங்கள் வருகையால்  சிறக்கட்டும்.   கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன்  ஆசிரியர் – வளரி

நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு – சென்னைப்பல்கலைக்கழகம்

  பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016  பிற்பகல் 3.00 தமிழ்த்துறை   விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு