இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…

வள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் மாலை – நாட்டியப் பாடல் தித், தித், தை; தாம் தித், தித், தை; தித்தக்கு தத்தக்கு தத்த தாம்; குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தங்குகு தங்குகு தங்குகு தித்தாம் குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தாதங்கி தங்கி கிடதக தித்தித் தை தத் தத் தாம தத்தாம் திருகிட கிடதக திக்கும்தாரி அருமறை தந்தவர், உலகப்புலவர் குறள்நெறி நல்கிய வள்ளுவர் வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! ஞாலப்…

தாய்த்தமிழும் மலையாளமும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 27, 2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 3   ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு: பாவ பாவ பாவ நோக்கு                 புதிய புதிய பாவ நோக்கு கய்ய வீசும் பாவ நோக்கு                 கண்ணிமய்க்கும்…

‘பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

  தமிழ்ப்பெயர்த் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரிவிலக்கிற்கான தேர்வுக்குழுவை மாற்றி யமைக்க வேண்டும்.   கேளிக்கை வரிச்சட்டம் என்பது 1939 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2006 இல் [அரசாணை (நிலை) எண் 72 (வணிக வரி -பதிவுத்துறை) நாள் 22.07.2006] தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 20.11.2006 இல் பிறப்பிக்கப்பட்ட மற்றோர் ஆணை மூலம்[அரசாணை (நிலை) எண் 147 வணிக வரி – பதிவுத்துறை நாள் 20.11..2006]   இக்கேளிக்கை வரிவிலக்கு, பழைய திரைப்படங்களுக்கும்…

சாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

சாதி எதிர்ப்பை நலிவாக்கவும் சாதி அமைப்பை வலுவாக்கவும் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. வடஇந்திய நாகரிகத்தையும்   பண்பாட்டையும் பின்பற்றிய காரணத்தினால் தமிழ்நாட்டில் படிப்படியாகச் சாதி அமைப்பு ஏற்பட்டது. முனிவர்களும் அறிஞர்களும் சாதி முறையை எதிர்த்தனர். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட புலவரும், மெய்யியல் அறிஞருமான திருவள்ளுவர், சாதி அமைப்பை “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” “அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” எனக் கண்டிக்கிறார்….

இழிவினை ஏற்படுத்தும் இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

    சில நேரங்களில் இடைச்செருகல் மூலநூலின் பெருமையை மிகுவிக்கும். ஆனால் இங்கோ தொல்காப்பியத்தின் தொன்மையைக் குறைத்தும், தமிழருக்கு இழிவுபடுத்தியும் அமைந்துள்ளன. இவ்விடைச்செருகல்களால்தான் தொல்காப்பியத்தின் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு எனப் பிற்பட்டக் காலத்திற்குக் கொண்டு வரப்பட்டு தமிழர் பண்பாடும் நாகரிகமும் ஆரியப் பண்பாட்டிலிருந்தும் நாகரிகத்திலிருந்தும் உருவானதாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies): பக்கம்21 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் தொல்காப்பியத்தின் கட்டமைப்பு நன்கு பின்னப்பட்ட கவின்கலை கூறுமிக்கத்தாக அமைந்துள்ளமையால் இவற்றின் கட்டமைப்பு அழகைச் சிதைக்காமல் மூலநூலில் எதையும் சேர்ப்பது என்பது உள்ளபடியே அரிதான செயலாகும். எனவே இக்கேள்விக்குரிய நூற்பாக்கள் தம்முடைய உண்மையான நிறத்திலேயே தோன்றுகின்றன. இவை எண்ணெயில் கலந்த நீராகத் தனித்து விளங்குகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம்20 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்

  சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்   மிகப்பழங்கால நூல்களில் இடைச்செருகல்கள் ஏற்படுவது மிக இயல்பான ஒன்றாகும். கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்திலும் இவ்வாறே ஏற்பட்டுள்ளது. குறும்புக்காரர்களின் கைகள் இதனைத் தொடாமல் விட்டு வைக்கவில்லை. எழுத்து அதிகாரமும் சொல் அதிகாரமும் தொகுப்பாக அமைந்து ஒவ்வொரு இயலின் பொருண்மையும் நிரல் பட அமைந்து நூற்பாக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளங்குகிறது. இவ்விரண்டும் மொழி குறித்த ஆய்வாகும். இடைச்செருகல் ஏற்பட்ட இடைக்காலத்தில் மொழிக் கல்வியில் யாருக்கும் நாட்டம் இல்லை என்பது தோன்றுகிறது.   ஆனால் பொருள்…

தொல்காப்பியர் கால ஆண்டுத் தொடக்கம் ஆவணி – சி.இலக்குவனார்

தொல்காப்பியர் கால ஆண்டுத் தொடக்கம் ஆவணி பல்வேறு நிலைகளிலே காதலைத் துய்த்து மகிழ்வதற்கு, தக்க பருவங்களையும், நேரங்களையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். காதலில் முல்லை முதன்மைப் பங்கு வகிக்கிறது. எனவே முல்லைப் பருவத்தையும் நேரத்தையும் குறிப்பிடும் பொழுது முதலில் அவர் கார்காலத்தைக் குறிப்பிடுகிறார். எனவே அறிஞர்கள் சிலர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டுத் தொடக்கம் கார் பருவத்தின் முதல் திங்களாகிய ஆவணி எனக் கருதுகின்றனர். கேரளாவில் இன்றைய நாளிலும் ஆவணியை முதலாகக் கொண்ட ஆண்டினை கணக்கிட்டு வருவது நடைமுறையில் இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர் (நூற்பா. 6,…

நம் எண்களை நாமறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் 1, 2, 3… என்னும் முறையிலான எண்கள் தமிழில் இருந்து அரபிக்குச் சென்று பரவியதே இருப்பினும், நாம் மூலத்தமிழ் எண் வடிவங்களை அறிதல் வேண்டும். பிறமொழியினர் அவர்கள் மொழியின் எண்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தவும் அறிந்திருக்கையில் நாம் அறியாதிருப்பது அழகன்று. ஆதலின் தமிழ் எண்கள் தரப்படுகின்றன. பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது.   ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘’10’ என்றே குறிக்கின்றன. ‘௰’ எனக் குறிப்போரும்…

தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 2 கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]                மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள்…

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்

பெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள்    இருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக ‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற எண்ணம் வந்தது.   மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர் சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே…