வெருளி நோய்கள் 1421 -1425: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1416 -1420: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1421 -1425 ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நம்பக வெருளி.நம்பிக்கை வைப்பது தொடர்பான பேரச்சம் பிறருடான உறவையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். பொதுவாகக் காதலர்களிடையே நம்பிக்கை வெருளி ஏற்படுவது காதலை முறிக்கும்.நம்பிக்கை மோசடியைச் சந்தித்தவர்கள் அல்லது பிறரது நம்பிக்கை மோசடியை அறிந்தவர்கள் பிறரை நம்புவது குறித்துக் கவலைப்படுவர்.யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்உறவெல்லாம் முள்ளாகும்உயிரெல்லாம் கல்லாகும்எனப் ‘பறக்கும் பாவை’யில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகள் நம்பக வெருளியின் வெளிப்பாடே.‘எங்க…
குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459) [ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ] மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும். பதவுரை: மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்;…
வெருளி நோய்கள் 1416 -1420: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1411 -1415: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1416 -1420 நடை பேசி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடை பேசி வெருளி.நடைபேசிகள்(walkie-talkies) காவல் துறையினரால் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, காவல் துறையின் குறியீடாகக் கொண்டு இவை குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். காவலர் சிலர் கவனக் குறைவால் தமக்குரிய நடைபேசியைத் தொலைத்துள்ளனர்.இதுபற்றி அறிந்த பிறர் விழிப்பாக இருப்பதற்கு எண்ணி அளவு கடந்து கவலைப்படுகின்றனர்.00 முகநூலில் ஒருவர் விடுக்கும் நப்புக் கோரிக்கையை மற்றவர் ஏற்காததால் வரும் அளவுகடந்த பேரச்சம் நட்பு ஏற்காமை வெருளி.எல்லாக் குமுகத்…
ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள்
ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள் ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில் – சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104 பதவுரை: மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்;…
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை! தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது. தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல், குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த…
வெருளி நோய்கள் 1411 -1415: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1406 -1410: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1411 -1415 நடுகல் குறித்து அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது நடுகல் வெருளி.நடுகல் குறித்துச் சங்க இலக்கியங்கள் 18 இடங்களில் குறித்துள்ளன. நடுகல் வணக்கம் தொன்றுதொட்டே உள்ளது. நாட்டிற்குக் காவலாக விளங்கிப் போரில் வீர மரணம் அடைந்தவர்க்குத்தான் நடுகல்கள் அமைக்கப்பட்டன.கல்லறைவெருளி-Coimetrophobia / Koimetrophobia), அழி பொருள் வெருளி(Necrophobia), புதைவுவெருளி-(Taphephobia/ Taphiphobia/ Taphophobia/Taphosphobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது நடுகல் வெருளி.coimetro என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் புதைவிடம் எனப் பொருள்.00 நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நடுக்க…
மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசிருக்கையில் அமர்ந்துள்ளது. வாழ்த்தி வரவேற்க வேண்டிய மாற்றம் இது. ஆனால், திராவிட மெய்யியத்தை(தத்துவத்தை) விரும்பாதவர்களும் ஆரியப் பித்தர்களும் திராவிடம் வீழ்ந்து விட்டது; 60 ஆண்டுகளாக ஆண்ட திராவிடம் ஒழிந்து விட்டது; 67இற்குப் பிறகு மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் விரட்டப்பட்டன; என்று கூக்குரலிடுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர்; இனி நம் ஆரிய ஆட்சிதான் என்று கொக்கரிக்கின்றனர். ஆனால், உண்மையில் மலர்ந்துள்ளது திராவிட ஆட்சிகளின் நீட்சியே. திராவிடம், திராவிடம் என்று உணர்வுடன் வாழ்பவர்கள் யாவரும் …
வெருளி நோய்கள் 1406 -1410: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1401 -1405: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1406 -1410 நகம் வெட்டல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகவெட்டல் வெருளி.நகத்தைச் சரியாக வெட்ட முடியாமல் போய்விடுமோ இதனால் ஏதும் கேடுவிளையுமோ என்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 நகை குறித்த வரம்பற்ற பேரச்சம் நகை வெருளி.கழுத்தணி, ஆரம், காதணி என்பன போன்று குறிப்பிட்ட வகை நகைமீது சிலருக்கு வெறுப்பு இருக்கும். சிலருக்குப்பொதுவாகவே நகைகள் மீது இருக்கம். சிலருக்கு ஒரு முறை நகையால் அரிப்பு ஏற்பட்டு, நகை ஒவ்வாமை உள்ளதாக எண்ணி வெறுப்பர். சிலர் பிறரின்…
வெருளி நோய்கள் 1401 -1405: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1396 -1400: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1401 -1405 தோறணையரைக் கண்டு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தோறணை வெருளி.Euax என்பது இலத்தீன் வியப்பிடைச்சொல். அதிலிருந்துதான் Euaxo உருவானது. தோற்றச்சிறப்பு கண்டு வியப்பதைக் குறிக்கிறது.தோரணம் > தோரணை என்பதுபோல் தோற்றம் > தோறணை(Posh) எனக் குறிக்கலாம். தோறணையுடன் திகழும் மக்களைத் தோறணையர் (Posh People) எனலாம்.00 நகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நக வெருளி.ஒருவரின் நகத்தைக் கொண்டே அவருக்குள்ள நோய்பற்றிக் கூறலாம் என்பர். எனவே, நகத்திற்குப் பாதிப்பு என்றால் உடலுக்குப் பெருங்கேடு என…
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்! நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம். நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம். தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது. தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால்…
வெருளி நோய்கள் 1396 -1400: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1391 -1395: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1396 -1400 தோல்வி குறித்து ஏற்படும் அல்லது எதிர்பார்க்கும் சூழல் குறித்த அளவுகடந்த பேரச்சமே தோல்வி வெருளி.தோல்வி வெருளி (cadophobia), தோற்கடிப்பு வெருளி (kakorraphiaphobia, kakorraphiophobia, kakorrhaphiophobia), ஆகூழின்மை வெருளி(Atychiphobia) யாவுமே தோல்வி தொடர்பானவைதானே. எனவே, பொதுவாகத் தோல்வி வெருளி என்று சொன்னால் போதும்.தோல்வி குறித்த அச்சமே முயற்சிக்கு முட்டுக்கட்டையாய் அமைந்து வெற்றி வழிக்குச் செல்வதைத் தடுக்கிறது.தேர்வு, தேர்தல், தொழில், காதல், வாழ்க்கை, விளையாட்டு, போட்டி என எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பது…
வெருளி நோய்கள் 1391 -1395: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1386 -1390: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1391 -1395 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
